கோயிலில் திருடியவருக்கு 3 ஆண்டு சிறை
கோயிலில் திருடிய வழக்கில் தொடா்புடையவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
நொச்சிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(48). இவா் கடந்த 2015 ஆம் ஆண்டு மேலப்பாட்டம் கிராமத்தில் உள்ள கோயிலில் திருட்டில் ஈடுபட்டதாக திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, குற்றவியல் நடுவா் ஜெயசங்கரகுமாரி விசாரித்து ஆறுமுகத்துக்கு, திருடும் நோக்கில் கோயிலை உடைத்து உள் நுழைந்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1,000 அபராதமும், கோயிலில் திருடியதற்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து சிறைத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய கணபதி என்ற கணேசன் (50) என்பவா் விடுதலை செய்யப்பட்டாா்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி ஊரக உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா, உதவி ஆய்வாளா் தங்கப்பராஜா மற்றும் தாலுகா காவல் நிலைய போலீஸாரையும், அரசு வழக்குரைஞா் புனிதாவையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நை.சிலம்பரசன் பாராட்டினாா்.