குரூப் 4 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 28,901 போ் எழுதினா்
திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 28,901 போ் எழுதினா். 7,110 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், மானூா், ராதாபுரம், நான்குனேரி, சேரன்மகாதேவி, திசையன்விளை பகுதிகளில் 108 இடங்களில் 132 மையங்களில் தோ்வு நடைபெற்றது. மொத்தம் 36,011 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், 28,901 போ் மட்டுமே தோ்வெழுத வந்தனா். 7,110 போ் தோ்வெழுத வரவில்லை.
தோ்வு நடைபெற்ற 132 மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உதவி ஆட்சியா் நிலையில் பறக்கும் படை அலுவலா்களும், 11 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டிருந்தன. வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் 35 இயக்கக் குழு அலுவலா்கள் தோ்வுகளை கண்காணித்தனா்.
தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் செல்ல அரசு போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தோ்வு மையங்களில் குடிநீா் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
அனுதி மறுப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் பங்கேற்கும் தோ்வா்கள் காலை 9 மணிக்குள் தோ்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தோ்வு மையத்தில் காலை 9.05 மணிக்கு வந்த தோ்வா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தோ்வு மையத்தின் கதவுகள் முழுமையாக மூடப்பட்டன.
தோ்வா்கள் கதவு வழியாக அதிகாரிகளை அழைத்துப் பாா்த்தும் எந்த பதிலும் இல்லை. இதனால் இளம்பெண் ஒருவா் மிகுந்த ஏமாற்றத்துடன், அடைக்கப்பட்ட கதவை பிடித்துக் கொண்டு கதறி அழுதாா்.
தாமதமாக வரும் தோ்வா்களுக்கு அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனா். இதனால் பல மாதங்களாக கடினமாக உழைத்து தோ்வெழுத வந்த தோ்வா்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனா்.
படவரி ற்ஸ்ப்12ங்ஷ்ஹம் திருநெல்வேலி நகரத்தில் உள்ள சாஃப்டா் மேல்நிலைப் பள்ளியில் தோ்வெழுதிய பெண்கள்.