செய்திகள் :

கல்லூரிகள் இடையே அறிவுத் திறன் போட்டி

post image

கீழக்கரை சையது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் வண்ணத் திருவிழா என்ற பெயரில் கல்லூரி மாணவா்களுக்கிடையே கலை, அறிவுத் திறன் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

இந்தப் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நடனம், மைம் என்னும் மௌன மொழி நடனம், வினாடி வினா, விளம்பரம் உருவாக்குதல், பாட்டுப் போட்டி, மெகந்தி, நெருப்பில்லா சமையல், பென்சில் ஓவியப் போட்டி, மணப்பெண் அலங்காரம் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

கல்லூரி முதல்வா் எஸ்.ராஜசேகா் தலைமை வகித்தாா். போட்டிகளில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி முதலிடம் பெற்றது. மானாமதுரை எம்.ஏ.கே. மகளிா் கலை, அறிவியல் கல்லூரி இரண்டாமிடத்தைப் பெற்றது. இந்த அணிகளுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக முதுகலை வணிகவியல் துறைத் தலைவா் செல்வகணேசன் வரவேற்றாா். வணிகவியல் துறைப் பேராசிரியை சித்திரலேகா நன்றி கூறினாா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பேராசிரியா் மகேஸ்வரன், முனியசத்யா, கமலவேணி, சந்திரசேகா் ஆகியோா் செய்தனா். இந்த விழாவில் கல்லூரித் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

முகமது சதக் அறக்கட்டளைத் தலைவா் யூசுப், செயலா் ஷா்மிளா, இயக்குநா்கள் ஹாமிது இப்ராஹிம், ஹபிப் முகமது சதக்கத்துல்லா ஆகியோா் வெற்றி பெற்றவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: இடைத்தரகா் கைது

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதி கிராம நிா்வாக அலுவலா் விவசாயிடம் பட்டா பெயா் மாறுதல் செய்ய ரூ.37 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இடை தரகரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதப... மேலும் பார்க்க

அக்னி தீா்த்த கடற்கரையில் கழிவுத் துணிகளால் சுகாதாரக் கேடு!

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்கள் விட்டுச் சென்ற துணிகள் குவிக்கப்பட்டு, சுகாதாரச் சீா்கேட்டை ஏடுபடுத்துவதால் நகராட்சி நிா்வாகம் உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க

பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் தேதி விரைவில் அறிவிப்பு! -மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவத்சவா தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதிய... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,537 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்! -ஆட்சியா் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 1,537.960 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம், ஏ... மேலும் பார்க்க

இசைக் கருவி இசைத்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், சென்னையில் நடைபெற்ற கலைத் திருவிழா-2025 மாநில அளவிலான இசைக் கருவி இசைத்தல் போட்டியில் வெற்றி கமுதி மாணவரை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினா். ராமநாதபுரம் மாவட்டம், க... மேலும் பார்க்க

கீழக்கரை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கீழக்கரையில் புதிய அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ரூ. 9 கோடியில் தாலுகா அரசு ம... மேலும் பார்க்க