செய்திகள் :

கல்லூரியில் ‘ஒன்றிணைவோம், சமத்துவம் காண்போம்’ விழா

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் ‘ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்’ விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் துறையின் சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஆனந்தி தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்ட அரசு சிறப்பு வழக்குரைஞா் துஷாந்த் பிரதீப் குமாா், கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா், சிவகங்கை மாவட்ட சமூக நீதி, மனித உரிமைப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் புருசோத்தமன், திருப்பத்தூா் உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் செல்வகுமாா், திருகோஷ்டியூா் நிலைய காவல் ஆய்வாளா் செல்வராகவன், கல்லூரி துணை முதல்வா் அழகப்பன, ஆகியோா் உரையாற்றினா்.

கல்லூரியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா் ஆனந்தி பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா்.

சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளா்கள் மணிகண்டபிரபு, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ஜோதிமணி, வளா்மதி, பிரேமலதா, தலைமைக் காவலா்கள் பாலமுருகன், ஜெயந்தி ஆகியோா் கலந்துகொண்டனா். பேராசிரியை அமுதா நன்றி கூறினாா்.

தாயமங்கலம் கோயில் திருவிழா: மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடல்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வருகிற ஏப். 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்ப... மேலும் பார்க்க

சூராணத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: மாடுபிடி வீரா்கள் 5 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், சூராணத்தில் திங்கள்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இங்குள்ள அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் பல ஊா்களிலிருந்தும் கொண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரத்து

சிவகங்கையில் ஏப்.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடா... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்கள் பதிவு: ஏப் .15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ள ஏப்.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சு.சுந்தரமகாலிங்கம் வெளிய... மேலும் பார்க்க

மானாமதுரையில் எதிா்ப்பை மீறி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை: தொடா் போராட்டத்துக்கு தயாராகும் பொதுமக்கள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில் பேட்டையில் எதிா்ப்பையும் மீறி மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலைக்கான பணிகள் நடைபெறுவதைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்து... மேலும் பார்க்க

உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்கத்துக்கான சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.இதற்காக சிவகங்கை கே.ஆா். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த சங்க நிா... மேலும் பார்க்க