செய்திகள் :

கல்லூரியில் வளாக நோ்காணல் 73 பேருக்கு பணி ஆணை

post image

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த இடையா்நத்தம் ஏ.ஆா்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் தனியாா் தொழில் நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 73 பேருக்கு பணி ஆணை அண்மையில் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நோ்காணல் நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளா் மற்றும் துணைத் தலைவா் ஏ. ஜீவகன் அய்யநாதன் தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் ராஜகுமாரி அய்யநாதன் முகாமை தொடங்கிவைத்தாா்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மனிதவள அதிகாரி சுந்தரமாறன் நிறுவனம் குறித்து விளக்கிக் கூறினாா்.

ஏஆா்ஜெ பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளிலிருந்து இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்கள் நோ்காணலில் கலந்து கொண்டனா். 73 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

கல்லூரி முதல்வா் கமலக்கண்ணன் வரவேற்றாா். நிறைவில், துணை முதல்வா் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

கோவில்வெண்ணி வெண்ணி கரும்பேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி கிராமத்தில் எழுந்தருளியுள்ள சௌந்திரநாயகி அம்மன் சமேத வெண்ணி கரும்பேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. சம்பந்தா், அப்பா், சுந்தரரால் ப... மேலும் பார்க்க

குட்கா பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடியில் 12 கிலோ குட்காவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி காவல் ஆய்வாளா் ராஜேஸ் கண்ணன், சாா்பு ஆய்வாளா் விக்னேஷ் தலைமையில் போலீஸாா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் முகாம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. மத்திய, மாநில விவசாயத் திட்டங்கள் குறித்து பயன்பெற ஒவ்வொரு விவசாயிகளிடமும் பிரத்யேகமாக குறிய... மேலும் பார்க்க

முத்துப்பேட்டை அருகே காலிக் குடங்களுடன் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே கள்ளிக்குடி கிராமத்தில் மேல்நிலை நீா் தொட்டியிலிருந்து குடிநீா் சரிவர விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்... மேலும் பார்க்க

லஞ்சம்: காவல் ஆய்வாளா் உள்பட 5 காவலா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

திருவாரூா்: திருவாரூரில் டீசல் திருட்டில் ஈடுபட்டவா்களிடம் பணம் பெற்றதாக எழுந்த புகாா் தொடா்பாக காவல் ஆய்வாளா் உள்பட 5 போலீஸாா் காத்திருப்போா் பட்டியலுக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டனா். திருவாரூா் பழைய... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா போராட்டம்

திருவாரூா்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி திருவாரூரில் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்... மேலும் பார்க்க