செய்திகள் :

கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலின் பின்னணி!

post image

தஞ்சாவூர் கீழவாசல் தட்டான்தெரு பகுதியில் இளைஞர்கள் சிலர் மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நரம்பில் செலுத்தி போதை ஏற்படுத்திக்கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இத்தகைய போதைப்பழக்கத்து ஆளாகி வந்துள்ளனர். ஒரு கும்பல், கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி.,ராஜராமன் உத்தரவின் பேரில், கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.

போதை மாத்திரை விற்பனை செய்த நவீன்குமார்

இதில், தட்டான்தெருவில் போதை மாத்திரை மற்றும் ஊசி விற்பனை செய்த கீழவாசல் பகுதியை சேர்ந்த முகமது அப்பாஸ், பிரவீன், அரவிந்த், வெங்கடேசன், அம்மாபேட்டையைச் சேர்ந்த சந்தோஷ்குமார், வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த அபிஷேக் ஆகிய 6 பேரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இவர்களிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "திண்டுக்கல் மரியநாதபுரம் ஹனுமான் நகரை சேர்ந்த நவீன்குமார் (33), போதை மாத்திரையை தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்துள்ளார். தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் தென்னரசு, திண்டுக்கலில் தங்கி இருந்து நவீன்குமார் குறித்து விசாரணை நடத்தினர். இதில் நவீன்குமார் மெடிக்கல் ரெப்பாக பணியாற்றி வருகிறார். வலி நிவாரணி மாத்திரைகள் அதிகளவில் தேவை இருப்பதை அறிந்துக்கொண்டு, ஆன்லைனில் புக்கிங் செய்யும் நபர்களை குறித்து மாத்திரைகள் விற்பனை செய்து வந்துள்ளார். இதில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது.

மேலும், அதிக வலி நிவாரணி மாத்திரைகளை ஹரியானா மாநிலத்தில் இருந்து வாங்கி தமிழகம் முழுவதும் ஒரு குழு அமைத்து சப்ளை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து நவீன்குமாரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட போதை மாத்திரை அட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது. அவரை தஞ்சாவூருக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினோம். வலி மாத்திரை அதிகளவில் எடுத்து கொண்டால் போதை உண்டாகும் எனவே போதைக்காக வலி மாத்திரை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்துக்கொண்டேன். பின்னர் நான், நடத்திய மெடிக்கலை வேறு நபருக்கு கொடுத்து விட்டு, மாத்திரை வாங்குவதற்கான அனுமதியை வைத்து, வலி நிவாரணியை அதிகளவில் கொள்முதல் செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்தேன். என்னிடம் கல்லுாரி மாணவர்கள் தான் அதிகளவில் மாத்திரையை வாங்கியதாக நவீன்குமார் தெரிவித்தார். இது குறித்து விசாரணை மேலும் தொடர்கிறது" என்றனர்.

சென்னையில் நடந்த கொலை.. கோவை கிணற்றில் வீசப்பட்ட உடல்.. 50 நாள்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை

கோவை செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று இரண்டு பேர் கொலை வழக்கு ஒன்றில் சரணடைந்தனர். விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பாலமுருகன் (45) மற்றும் பாளையங்கோட்டை பகுதிய... மேலும் பார்க்க

கோவை தனியார் நிறுவனம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த கை - காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம், சூலூர் அருகே கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வளாகம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் மனித கை ஒன்று கண்டறியப்பட்டது. அதன் அருகிலேயே ரயில் தண்டவாளம் இருக்கிறது.கோவை ஏதாவது... மேலும் பார்க்க

தேனி: பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் இன்ஜின் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்

தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர்கள் வடிவேல் - அருள் ஆனந்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். அருள் ஆனந்தி ஆண்டிப்பட்டியில் உள்ள நிறுவனத்தில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். ஆனந்தி வேலைக்கு செ... மேலும் பார்க்க

சேலம்: நகைக்கடை உரிமையாளர்கள் மீது ஆசிட் வீசி நகைக் கொள்ளை முயற்சி; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். இவர் அப்பகுதியில் ஏ.வி.எஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு 8:45 மணியளவில் இருவர் நகை வாங்குவதற்கு வந்துள்ளனர். அப்போது ... மேலும் பார்க்க

`திருமணம், நட்பு, ஆபாச மெசேஜ்' - Facebook -ல் பழகிய பெண்களிடம் ரூ.9 கோடியை இழந்த முதியவர்

சைபர் கிரிமினல்கள் அடிக்கடி பெண்கள் மற்றும் முதியவர்களிடம் பணமோசடி புகார் அல்லது திருமண ஆசை என எதாவது ஒரு காரணத்தை சொல்லி பணம் பறிக்கின்றனர். அதிகமான நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் ம... மேலும் பார்க்க

அந்தியூர் குதிரை சந்தை: மர்மமான முறையில் இறந்த 6 குதிரைகள்; பிரேதப் பரிசோதனை முடிவு சொல்வது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள புதுப்பாளையத்தில் அமைந்துள்ள குருநாதசாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.ஆண்டுதோறும் ஆடி மாதம் குருநாதசுவாமி கோவிலின் திருவிழா மிக விமர்சையாக நடைபெறும்... மேலும் பார்க்க