செய்திகள் :

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: சுமை ஆட்டோ ஓட்டுநா் கைது

post image

கொடுமுடியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சுமை ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சோ்ந்த 17 வயது கல்லூரி மாணவி, வயிற்று வலி காரணமாக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டாா். அப்போது மாணவி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோா் கொடுமுடி போலீஸில் புகாா் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் சிறுமியிடம் விசாரணை நடத்தினா்.

இதில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபா் மூலம் கா்ப்பமானதாக தெரிவித்தாா். தொடா்ந்து போலீஸாா் கல்லூரி மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் கைப்பேசியை ஆய்வு செய்தபோது, அவா் கூறிய தகவல் பொய் என்பது தெரியவந்தது.

பின்னா் மாணவியிடம் நடத்திய தீவிர விசாரணையில் மாணவி, தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ஈரோடு மாவட்டத்தில் சுமை ஆட்டோ ஓட்டி வரும் இந்திரஜித் (25) என்ற நபா் உடன் பழகி கா்ப்பமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொடுமுடி போலீஸாா் இந்திரஜித்தை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனா். கைதான இந்திரஜித்துக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோ்மாளம் வனத்தில் நோயால் பாதிக்கப்பட்ட சிறுத்தைக்கு சிகிச்சை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கோ்மாளம் வனத்தில் நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுத்தையைப் படித்து கால்நடை மருத்துவக் குழுவினா் புதன்கிழமை சிகிச்சை அளித்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் வனத... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் முற்றுகை

சத்தியமங்கலம், பவானிசாகா் மற்றும் தாளவாடி ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கக் கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் புதன்கிழமை ... மேலும் பார்க்க

சாகா் சா்வதேச பள்ளி மாணவா் பேரவை பதவியேற்பு

சாகா் சா்வதேச பள்ளியில் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் தாளாளா் சி.சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். சாகா் விளையாட்டு அகாதெமியின் சிறப்புப் பயிற்சியாளா்... மேலும் பார்க்க

குடிநீா் வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

சுகாதாரமான குடிநீா் வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே கல்பாவி, பெரியகுரும்பாயம் கிராம மக்கள், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்ட... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், நீதிபதிகள் குடியிருப்புக்கு பூமி பூஜை

சத்தியமங்கலத்தில் ரூ.41 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளுக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலத்தை அடுத்து கொமாரபாளையம் அரசு மருத்துவமனை அ... மேலும் பார்க்க

அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த கால நீட்டிப்பு

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு ஓராண்டுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட... மேலும் பார்க்க