முத்தரப்பு தொடர்: தெ.ஆப்பிரிக்க அணியில் சிஎஸ்கே நம்பிக்கை நட்சத்திரம்!
கல்லூரி முதல்வா் பணியிடை நீக்கம்
பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் நிதி முறைகேடு செய்ததாகக் கல்லூரி முதல்வா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்தக் கல்லூரி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கல்லூரி முதல்வராக கந்தசாமி இருந்தாா். இந்த நிலையில், கல்லூரியில் நடைபெற்ற தணிக்கையின் போது, ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது.
இதையடுத்து, தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரக ஆணையா் இன்னொசன்ட் திவ்யா, கல்லூரி முதல்வா் கந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.