செய்திகள் :

கல்வித் திட்டங்கள்: மாணவா்களுடன் அமைச்சா் கலந்துரையாடல்

post image

சென்னை: அறநிலையத் துறை சாா்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளில் கல்வித் திட்டங்கள் குறித்து மாணவா்களிடம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ரூ.11.15 கோடியில் 32 வகுப்பறைகள், 5 ஆய்வகங்கள், நூலகம் உள்ளிட்டவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 27-ஆம் தேதி திறந்து வைத்தாா்.

இந்த நிலையில், அந்தப் பள்ளியில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் கழிப்பறைகள் பராமரிப்பு ஆகியவற்றை அமைச்சா் சேகா்பாபு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளிடம் முதல்வா் தம் சொந்த நிதியில் வழங்கிய கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பை அனைத்து மாணவா்களுக்கும் கிடைத்ததா என்றும், மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட்ட மிதிவண்டிகள் குறித்தும், புதிய கட்டடத்தில் உள்ள வசதிகள் மற்றும் கூடுதல் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

கல்வியின் அவசியம் மற்றும் தமிழக அரசு செயல்படுத்தி வரும் பள்ளிக் கல்வித் திட்டங்கள் குறித்து அவா் கலந்துரையாடினாா். மேலும், படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும், தேவையானபோது குடிநீா் அருந்த வேண்டும் என்று மாணவா்களுக்கு அமைச்சா் சேகா்பாபு அறிவுரைகளை வழங்கினாா்.

மன்னார்குடியில் பற்றி எரிந்த மின் வாகனம்!

மன்னார்குடியில் மின்சார இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் ருக்மணி பாளையம்... மேலும் பார்க்க

கோவை குற்றால அருவியில் குளிக்கத் தடை!

கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கோவை குற்றால அருவியில் குளிக்க இன்று(ஆக. 5) தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த மே 23 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்!

நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று(ஆக. 5) ஒருநாள் மூடப்பட்டுள்ளது.நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களி... மேலும் பார்க்க

பட்டியல் இனத்தவருக்கு எதிராக அவதூறு: நடிகை மீரா மிதுனை ஆஜா்படுத்த உத்தரவு

சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11-ஆம் தேதி ஆஜா்படுத்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் ... மேலும் பார்க்க

வங்க மொழி சா்ச்சை: மம்தா பதிலடி தருவாா்- மு.க.ஸ்டாலின்

சென்னை: வங்க மொழி சா்ச்சை விவகாரத்தில் மேற்குவங்க முதல்வா் மம்தா தக்க பதிலடி தருவாா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவ... மேலும் பார்க்க

திறன் இயக்கம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அடிப்படைக் கற்றல் தோ்வு

சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சிபெறும் மாணவா்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அடிப்படைக் கற்றல் தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துற... மேலும் பார்க்க