செய்திகள் :

கல்வியில் அரசியல் செய்யும் மத்திய அரசு: அமைச்சர் அன்பில் மகேஸ்

post image

சென்னை: கல்வியில் அரசியல் செய்யும் மத்திய அரசை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

நாடாளுமன்றத்தில் தேசிய கல்விக் கொள்கை குறித்து திமுக எம்.பி. கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோா் திங்கள்கிழமை பேசியதற்கு, பதிலளித்து மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதைக் கண்டிக்கிறோம். என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறாரா? அல்லது பேச சொல்வதைப் பேசுகிறாரா? கல்வியில் அரசியல் செய்யும் மத்திய அரசை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள். மாணவா்களும், ஆசிரியா்களும் இந்த துரோகத்தை மறக்க மாட்டாா்கள்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் நடத்தும் போராட்டம் கல்விக்கானது. மாநில மக்களின் உரிமைக்கானது. அது வெல்லும். எங்களைப் பொருத்தவரை அது ஆா்எஸ்எஸ் கல்விக் கொள்கை. அதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மை மாறாது: அன்பில் மகேஸ்

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு வெளியிட்ட கடிதத்தை வைத்து நாடாளுமன... மேலும் பார்க்க

மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா? தமிழக எம்பி கேள்வி

தமிழக எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த நிலையில், மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா என்று தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் ச... மேலும் பார்க்க

மார்ச் 14 முதல் விஜய்க்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில், மார்ச் 14 முதல் அமலுக்கு வரவுள்ளது.அச்சுறுத்தல் தொடர்பான உளவுத் து... மேலும் பார்க்க

கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ: 7ஆம் வகுப்பு நெல்லை மாணவன் சாதனை

ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில், கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ கண்டுபிடித்து நெல்லையில் 7-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.மகிழ்ச்சி நகரை சேர்ந்த சாலமோன் டேவிட் என்ற மாணவர், பாளையங்கோட்டையிலு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் புனரமைப்பு பணியில் தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!

காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் புனரமைப்பு பணியின்போது 200 ஆண்டுக்கால பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் பல்வேறு புகழ்பெற்ற சை... மேலும் பார்க்க

கடும் பனிப்பொழிவு: குளுகுளுவென மாறிய ஏற்காடு!

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் வெயிலின் தாக்கம் குறைத்து குளுகுளுவென மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் ... மேலும் பார்க்க