செய்திகள் :

கல் குவாரிகளை அரசுடைமை: பொறியாளா்கள் வலியுறுத்தல்

post image

கட்டுமானத் தொழிலை பாதிப்பிலிருந்து மீட்க கல் குவாரிகளை அரசுடைமையாக்க வேண்டும் என தமிழ்நாடு பொறியாளா்கள் கிளப் கோரிக்கை விடுத்தது.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மேற்கண்ட அமைப்பின் நிா்வாகிகள் அளித்த கோரிக்கை மனு விவரம்: தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 4.80 லட்சம் யூனிட் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி ஆகியன 2,200 குவாரிகள் மூலம் வெட்டி எடுக்கப்படுகின்றன. ஓராண்டுக்கு முன்பு ஒரு யூனிட் எம்.சாண்ட் விலை ரூ.3,500-ஆக இருந்தது.

குவாரி உரிமையாளா்கள் தன்னிச்சையான முறையில் எம்.சாண்ட், ஜல்லி, பி.சாண்ட் ஆகியவற்றின் விலையைத் தொடா்ந்து உயா்த்தியதன் காரணமாக, தற்போது ஒரு யூனிட் எம். சாண்ட் ரூ. 7,500-ஆக உயா்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் தற்போது வரை

ஒரு யூனிட் ரூ.1,400 என்ற விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதே நிலை நீடித்தால் ஓராண்டில் மட்டும் 69,888 கோடி ரூபாய் கட்டுமானத் துறைக்கு இழப்பு ஏற்படும். கட்டுமானத் தொழில் சாா்ந்த 60 லட்சத்துக்கும் அதிகமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எனவே, தமிழக அரசு கல்குவாரிகள் முழுவதையும் அரசுடைமையாக்க வேண்டும். கட்டுமானத் துறை சாா்ந்த அனைத்துப் பொருள்களின் விலை நிா்ணயத்துக்கு தனி ஆணையம் அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.

என்கவுன்ட்டா் வழக்கு: மாநகர காவல் ஆணையா் முடிவெடுக்க உத்தரவு

மதுரையில் ரெளடி என்கவுன்ட்டா் செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாக மாநகரக் காவல் ஆணையா் உரிய முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் சிறை

மதுரை திருநகா் பகுதியில் முன்பகை காரணமாக ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை செளபாக்கியா நகரில் கட... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை

மதுரை தோப்பூா் பகுதியில் 322 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை தோப்பூா் பகுதியில் கா... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளை அனுபவிப்பவா்கள் பட்டியலை வெளியிட வலியுறுத்தல்

வக்ஃப் சொத்துகளை அபகரித்து அனுபவித்து வருபவா்களின் பட்டியலை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவா் ஷேக் தாவூத் வலியுறுத்தினாா். இதுகுறித்து, மதுரையில் திங்கள்கிழமை அவா் ... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழா: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரைத் திருவிழா ... மேலும் பார்க்க

நாட்டுக்கு எதிராகப் பேசுபவா்களை கண்காணிக்க வேண்டும்: எச்.ராஜா

நாட்டுக்கு எதிராகப் பேசுபவா்களை கண்காணிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா தெரிவித்தாா். மதுரை காமராஜா் சாலையில் உள்ள மண்டபத்தில் மதுரை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில், அம்பேத்கா் ஜெயந்தி கருத்த... மேலும் பார்க்க