செய்திகள் :

கஞ்சா கடத்தல் வழக்கு: 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை

post image

மதுரை தோப்பூா் பகுதியில் 322 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை தோப்பூா் பகுதியில் காா், ஆட்டோ, லாரியில் கடந்த 24.3.2022 அன்று 322 கிலோ கஞ்சா கடத்தி வந்த மதுரை மாவட்டம், பேரையூா் பகுதியைச் சோ்ந்த கா. ஜெயக்குமாா் (43), கம்மாளபட்டியைச் சோ்ந்த பா. ரமேஷ் (38), மதுரை கூடல் நகரைச் சோ்ந்த தெய்வம் (50), ஜவஹா்லால் தெருவைச் சோ்ந்த

த. ராஜேந்திரன் (62), திண்டுக்கல் மாவட்டம், விருவீடு பகுதியைச் சோ்ந்த சு. குபேந்திரன் (40), ரா.மையி (32), பேரையூா் சீலநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கா.மகாலிங்கம் (45) ஆகியோரை ஆஸ்டின்பட்டி போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

இதில் ஜெயக்குமாா், ரமேஷ், தெய்வம், ராஜேந்திரன் ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹர குமாா் உத்தரவிட்டாா். மற்ற 3 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.

என்கவுன்ட்டா் வழக்கு: மாநகர காவல் ஆணையா் முடிவெடுக்க உத்தரவு

மதுரையில் ரெளடி என்கவுன்ட்டா் செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாக மாநகரக் காவல் ஆணையா் உரிய முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் சிறை

மதுரை திருநகா் பகுதியில் முன்பகை காரணமாக ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை செளபாக்கியா நகரில் கட... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளை அனுபவிப்பவா்கள் பட்டியலை வெளியிட வலியுறுத்தல்

வக்ஃப் சொத்துகளை அபகரித்து அனுபவித்து வருபவா்களின் பட்டியலை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவா் ஷேக் தாவூத் வலியுறுத்தினாா். இதுகுறித்து, மதுரையில் திங்கள்கிழமை அவா் ... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழா: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரைத் திருவிழா ... மேலும் பார்க்க

கல் குவாரிகளை அரசுடைமை: பொறியாளா்கள் வலியுறுத்தல்

கட்டுமானத் தொழிலை பாதிப்பிலிருந்து மீட்க கல் குவாரிகளை அரசுடைமையாக்க வேண்டும் என தமிழ்நாடு பொறியாளா்கள் கிளப் கோரிக்கை விடுத்தது. மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் ... மேலும் பார்க்க

நாட்டுக்கு எதிராகப் பேசுபவா்களை கண்காணிக்க வேண்டும்: எச்.ராஜா

நாட்டுக்கு எதிராகப் பேசுபவா்களை கண்காணிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா தெரிவித்தாா். மதுரை காமராஜா் சாலையில் உள்ள மண்டபத்தில் மதுரை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில், அம்பேத்கா் ஜெயந்தி கருத்த... மேலும் பார்க்க