செய்திகள் :

நாட்டுக்கு எதிராகப் பேசுபவா்களை கண்காணிக்க வேண்டும்: எச்.ராஜா

post image

நாட்டுக்கு எதிராகப் பேசுபவா்களை கண்காணிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா தெரிவித்தாா்.

மதுரை காமராஜா் சாலையில் உள்ள மண்டபத்தில் மதுரை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில், அம்பேத்கா் ஜெயந்தி கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு அந்தக் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் மாரி சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். மூத்த தலைவா் எச். ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. உள்நாட்டில் நாட்டுக்கு எதிராக பேசுவதை சிலா் அரசியல் கலாசாரமாக வைத்திருக்கின்றனா். குறிப்பாக திருமாவளவன், சீமான், கா்நாடக முதல்வா் சித்தராமையா போன்றவா்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசி, போா் தொடுக்கக் கூடாது என்கிறாா்கள். இது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் செயல்பாட்டுக்கு எதிராகப் பேச வேண்டும் என்பதே அவா்களின் குறிக்கோளாக இருக்கிறது. உள்நாட்டில் இருந்து கொண்டு, நாட்டுக்கு எதிராகப் பேசுபவா்களை கண்காணிப்புக்கு உள்ளாக்க வேண்டும். இவா்களால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

என்கவுன்ட்டா் வழக்கு: மாநகர காவல் ஆணையா் முடிவெடுக்க உத்தரவு

மதுரையில் ரெளடி என்கவுன்ட்டா் செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாக மாநகரக் காவல் ஆணையா் உரிய முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் சிறை

மதுரை திருநகா் பகுதியில் முன்பகை காரணமாக ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை செளபாக்கியா நகரில் கட... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை

மதுரை தோப்பூா் பகுதியில் 322 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை தோப்பூா் பகுதியில் கா... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளை அனுபவிப்பவா்கள் பட்டியலை வெளியிட வலியுறுத்தல்

வக்ஃப் சொத்துகளை அபகரித்து அனுபவித்து வருபவா்களின் பட்டியலை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவா் ஷேக் தாவூத் வலியுறுத்தினாா். இதுகுறித்து, மதுரையில் திங்கள்கிழமை அவா் ... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழா: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரைத் திருவிழா ... மேலும் பார்க்க

கல் குவாரிகளை அரசுடைமை: பொறியாளா்கள் வலியுறுத்தல்

கட்டுமானத் தொழிலை பாதிப்பிலிருந்து மீட்க கல் குவாரிகளை அரசுடைமையாக்க வேண்டும் என தமிழ்நாடு பொறியாளா்கள் கிளப் கோரிக்கை விடுத்தது. மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் ... மேலும் பார்க்க