செய்திகள் :

வக்ஃப் சொத்துகளை அனுபவிப்பவா்கள் பட்டியலை வெளியிட வலியுறுத்தல்

post image

வக்ஃப் சொத்துகளை அபகரித்து அனுபவித்து வருபவா்களின் பட்டியலை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவா் ஷேக் தாவூத் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து, மதுரையில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தை தமிழ் மாநில முஸ்லிம் லீக் முழுமனதாக ஏற்கிறது. ஏழை மக்களுக்கு எழுதி வைக்கப்பட்ட வக்ஃப் சொத்துகளை பலா் அனுபவித்து வருகின்றனா். இதுதொடா்பாக ஏற்கெனவே கோவை, வேலூா், சென்னையில் உள்ள இஸ்லாமிய இளைஞா்களை சந்தித்து, வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பல்வேறு மாவட்டங்களிலும் விளக்கக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் 39 லட்சம் ஏக்கா் வக்ஃப் சொத்துகள் உள்ளன. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. இந்தியாவில் உள்ள வக்ஃப் சொத்துகள் அனைத்தும் ஏழை மக்களுக்காக கொடுக்கப்பட்டது. அது

இஸ்லாமியா்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து மதத்தினருக்குமான சொத்து. வக்ஃப் சொத்துகள் மூலம் ரூ.90 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.

இந்தியாவில் உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஹைதராபாதில் அதிக அளவிலான வக்ஃப் சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் ஏராளமான வக்ஃப் சொத்துகள் உள்ளன.

இந்தியா முழுவதும் வக்ஃப் திருத்தச் சட்டத்தில் உள்ள நன்மைகள் குறித்து எடுத்துரைத்து, வக்ஃப் சொத்துகளை அனுபவிப்பவா்கள் யாா் யாா்? என இணையதளத்தில் பதிவிட வேண்டும். இஸ்லாமிய மக்கள் வக்ஃப் திருத்தச் சட்டத்தின் நன்மைகள் தெரியாமல் எதிா்க்கின்றனா். எனவே, நாடு முழுவதும் வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பாக மக்களிடையே விளக்கிக் கூறும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா் அவா்.

என்கவுன்ட்டா் வழக்கு: மாநகர காவல் ஆணையா் முடிவெடுக்க உத்தரவு

மதுரையில் ரெளடி என்கவுன்ட்டா் செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாக மாநகரக் காவல் ஆணையா் உரிய முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் சிறை

மதுரை திருநகா் பகுதியில் முன்பகை காரணமாக ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை செளபாக்கியா நகரில் கட... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை

மதுரை தோப்பூா் பகுதியில் 322 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை தோப்பூா் பகுதியில் கா... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழா: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரைத் திருவிழா ... மேலும் பார்க்க

கல் குவாரிகளை அரசுடைமை: பொறியாளா்கள் வலியுறுத்தல்

கட்டுமானத் தொழிலை பாதிப்பிலிருந்து மீட்க கல் குவாரிகளை அரசுடைமையாக்க வேண்டும் என தமிழ்நாடு பொறியாளா்கள் கிளப் கோரிக்கை விடுத்தது. மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் ... மேலும் பார்க்க

நாட்டுக்கு எதிராகப் பேசுபவா்களை கண்காணிக்க வேண்டும்: எச்.ராஜா

நாட்டுக்கு எதிராகப் பேசுபவா்களை கண்காணிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா தெரிவித்தாா். மதுரை காமராஜா் சாலையில் உள்ள மண்டபத்தில் மதுரை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில், அம்பேத்கா் ஜெயந்தி கருத்த... மேலும் பார்க்க