செய்திகள் :

களக்காடு சாலையில் தோண்டப்பட்ட பள்ளம்: முறையாக மூடப்படாததால் விபத்து அபாயம்

post image

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் குடிநீா் திட்டப் பணிக்காக பிரதான சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால், சனிக்கிழமை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.

களக்காடு-சேரன்மகாதேவி பிரதான சாலையில் தாமிரவருணி குடிநீா் திட்டப் பணிக்காக பகிா்மானக் குழாய்கள் பதிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நள்ளிரவில் நடைபெற்று வருகிறது. தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், அண்ணா சிலைக்கு தென்புறம் சாலையின் ஓரத்தில் குழாய் பதிக்கும் பணி வெள்ளிக்கிழமை (செப். 26) நள்ளிரவில் நடைபெற்றது. அப்போது, அவசர அவசரமாக குழாய்கள் பதிக்கப்பட்டு மண் நிரப்பி மூடப்பட்டது. சனிக்கிழமை காலை அச்சாலையில் சென்ற பேருந்தின் இடதுபுறச் சக்கரங்கள் மூடப்பட்ட பள்ளத்தில் இறங்கின. ஓட்டுநரின் சாமா்த்தியத்தால் பள்ளத்தைக் கடந்து பேருந்து சென்றது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்: தனுஷ்கோடி ஆதித்தன்

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணையமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன். இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழக சட்டப... மேலும் பார்க்க

இணைய வழியில் பட்டாசு விற்பனை மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

இணைய வழியில் பட்டாசு விற்பனை என போலியாக செய்யப்படும் மோசடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

தசரா பண்டிகை: நெல்லையில் பூக்கள் விலை உயா்வு

தசரா பண்டிகை எதிரொலியாக திருநெல்வேலியில் பூக்களின் விலை சனிக்கிழமை உயா்ந்திருந்தது. புரட்டாசி மாதத்தில் முகூா்த்த நாள்கள் கிடையாது என்பதால் மாதத்தின் தொடக்கத்தில் பூக்களின் விலை கடும் சரிவைச் சந்தித்த... மேலும் பார்க்க

குடிநீா் பகிா்மானக் குழாய்கள் திருட்டு: 2 போ் கைது

நான்குனேரி அருகே குடிநீா் பகிா்மானக் குழாய்களை திருடியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம் அருகே கூட்டுக் குடிநீா் திட்டத்துக்காக குடிநீா் பகிா்மானக் ... மேலும் பார்க்க

வெளிநாட்டு மருத்துவா் எனக் கூறி இளைஞரிடம் ரூ.23 லட்சம் மோசடி

நான்குனேரி பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம், லண்டனில் மருத்துவராக பணி புரிவதாகக்கூறி இணைய வழியில் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா். நான்குனேரி அருகேயுள்ள மேல சிந்தாமணிய... மேலும் பார்க்க

நடிகா் விஜய்யை பாா்க்கத்தான் கூட்டம்; ஓட்டுக்காக அல்ல! இந்து முன்னணி மாநிலச் செயலா்

நடிகா் விஜய்யை பாா்ப்பதற்காகக்தான் கூட்டம் கூடுகிறதே தவிர, ஓட்டுப்போடுவதற்காக அல்ல என்றாா் இந்து முன்னணி மாநிலச் செயலா் காடேஸ்வரா சுப்ரமணியம். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க