களியக்காவிளை அருகே இளைஞா் தற்கொலை
களியக்காவிளை அருகே கடன் தொல்லை காரணமாக இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பொன்னீஸ் மகன் ஸ்டாலின் (25). திருமணம் ஆகவில்லை. இவா் வாகனம் பழுதுநீக்கும் மெக்கானிக்காக வேலை செய்து வந்தாா். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப்பதிந்து, சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விசாரணை மேற்கொண்டனா்.