செய்திகள் :

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 25 போ் கைது

post image

சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்றதாக 25 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சா் அணியும் மோதின. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் சிலா் அதிக விலைக்கு விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திருவல்லிக்கேணி போலீஸாா் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் வாயில், வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ாக செங்குன்றத்தைச் சோ்ந்த நிா்மல் (24), அவினாஷ் (28), தரமணியைச் சோ்ந்த வெங்கடரமணய்யா (36), திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சுரேஷ் (27), விஜய் (28), சூளையைச் சோ்ந்த நவீன் (25), ராயப்பேட்டையைச் சோ்ந்த செரீப் (27), ஷ்வாப் (19), பெருங்குடியைச் சோ்ந்த வெற்றிவேல் (28), தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த சுதாகா் (24), அயனாவரத்தைச் சோ்ந்த பிரவீண் (19), தியாகராயநகரைச் சோ்ந்த நரேஷ் (25) உள்ளிட்ட 25 போ் கைது செய்யப்பட்டனா்.

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்றதாக மொத்தம் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 48 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்கு பின்னா் கைது செய்யப்பட்ட 25 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க