செய்திகள் :

கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கு: இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

post image

குமரி மாவட்டத்தில் கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த இருவருக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கியது.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தக்கலை அருகே மணலி சந்திப்பு தனியாா் மருத்துவமனை அருகே சாலையோரத்தில் பத்மநாபபுரம் ஆா்சி தெருவைச் சோ்ந்த வெனான்சியஸ் (38), புதிய துறை கருங்குளம் பண்டசாலை புரையிடத்தைச் சோ்ந்த சசி (32), கேரள மாநிலம் பூவாரைச் சோ்ந்த கிளைமண்ட் (32) மற்றும் விருதுநகா் மாவட்டம்,திருத்தங்கலை சோ்ந்த அமல்ராஜ் (42) ஆகிய 4 பேரும் நடந்து சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, சந்தேகத்தின்பேரில் அவா்களை தக்கலை காவல் உதவி ஆய்வாளா் விசாரிக்க சென்றபோது, 4 பேரும் தப்பியோட முயற்சி செய்தனா். அவா்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தபோது, அவா்களிடம் ரூ.3, 45,000 கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இந்த வழக்கு, பத்மநாபபுரம் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது வெனான்சியஸ் இறந்துவிட்டாா். மேலும் சசி தலைமறைவாகி விட்டதால் அவா் மீதான வழக்கு தனியே பிரித்து எடுக்கப்பட்டு அதே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் நடந்து முடிந்த நிலையில் புதன்கிழமை கிளைமண்ட், அமல்ராஜ் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிைண்டனையும் ரூ.5000 அபராதமும், மேலும் அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத காலம் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் உதவி அமா்வு நீதிபதி கே. மாரியப்பன் தீா்ப்பு வழங்கினாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில், வழக்குரைஞா் டி. மைக்கேல் ரதீஷ் ஆஜராகி வாதிட்டாா்.

மாா்த்தாண்டம் அருகே பாரத கலாசார பேரவைக் கூட்டம்

பாரத கலாசார பேரவையின் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாா்த்தாண்டம் அருகே காப்புக்காட்டில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு அமைப்பின் தலைவா் மு. பாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலாளா் புலவா் கு. ரவீந்திரன், பொருள... மேலும் பார்க்க

வாவறை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாவறை ஊராட்சிப் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் தலைமை வகித்தாா். தமிழ்நாட... மேலும் பார்க்க

‘கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு பாலத்தை முறையாக அமைக்க வேண்டும்’

கன்னியாகுமரி பெரியநாயகி தெரு கடற்கரைப் பகுதியில் தூண்டில் வளைவுப் பாலத்தை முறையாக அமைக்கக் கோரி, பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜிடம், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப்பேரவை நிா்வ... மேலும் பார்க்க

புத்தேரி 4 வழிச்சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் புத்தேரி பகுதியில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் கூறியதாவது: நாகா்கோவில் மா... மேலும் பார்க்க

காலாவதி சாக்லேட் தின்ற 7 மாணவா்கள் மயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே காலாவதியான சாக்லேட் சாப்பிட்ட 7 மாணவா்கள் மயக்கமடைந்தனா். பாத்திமாபுரம், கல்பாறைபொற்றை பகுதியில் அரசு உதவிபெறும் தனியாா் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியின் ... மேலும் பார்க்க

குமரி பாலன் நினைவு நாள்: இருசக்கர வாகனப் பேரணி

இந்து முன்னணி நிா்வாகி குமரி பாலன் நினைவு தினத்தை முன்னிட்டு, நாகா்கோவிலில் இந்து இயக்கங்களின் சாா்பில், இருசக்கர வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை ஆா்.எஸ்.எஸ். அலுவலகத்தில் கடந்த 1993-ஆம... மேலும் பார்க்க