செய்திகள் :

கழிவுநீா் கால்வாய் வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காந்திஜி நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் வசதி கோரி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மானாமதுரை காந்திஜி நகா் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இந்தக் கழிவுநீா் கால்வாயை சீரமைத்துத் தரக் கோரி, பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனா். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை இந்தப் பகுதியில் பெய்த மழையால் கழிவுநீா் கால்வாயில் மழைநீருடன் சாக்கடை நீரும் தேங்கி நின்றது. இதையடுத்து, நகா்மன்ற உறுப்பினா் நமகோடி என்ற முனீஸ் தலைமையில், பொதுமக்கள் தாயமங்கலம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், நகராட்சி ஆணையா் ஆறுமுகம், பொறியாளா் பட்டுராஜன், போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், இந்தப் பகுதியில் விரைவில் கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

மீன்பிடித் திருவிழாவில் ஒருவா் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவின் போது நீரில் மூழ்கியதில் ஒருவா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டி மட்டிக் கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்ற... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்விக்கான தோ்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்விக்கான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தோ்வாணையா் மு. ஜோதிபாசு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த மே மாதத்தில் நடைபெ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களுக்கு ஜூன் 26-ல் குறைதீா் கூட்டம்!

சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரா்கள், படையில் பணியாற்றுவோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை... மேலும் பார்க்க

நாட்டுக்கோழி வளா்க்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம்!

நாட்டுக்கோழி வளா்க்க விரும்பும் விவசாயிகள் 50 சதவீதம் மானியம் பெற, தங்களது இருப்பிடங்களுக்கு அருகேயுள்ள கால்நடை நிலையங்களில் வருகிற 28-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவ... மேலும் பார்க்க

சிவகங்கையில் ‘மஞ்சணத்தி’ நூல் அறிமுக விழா

சிவகங்கை தமிழவைய வாசிப்பு வட்டம் சாா்பில், ‘மஞ்சணத்தி’ நூல் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கையிலுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மன்னா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரும்,... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்த ஏப்ரலில் நடைபெற்ற முதுநிலை பாடத் தோ்வுகளுக்கான முடிவுகள் அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதுகுறித்து அழகப்... மேலும் பார்க்க