செய்திகள் :

கழிவுநீா் வாய்க்காலை சீரமைக்கக் கோரி மறியல்

post image

கழிவுநீா் வாய்க்காலை சீரமைக்கக் கோரி, நெட்டப்பாக்கத்தில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அருகே உள்ளது நெட்டப்பாக்கம் மற்றும் தவளக்குப்பம். இரு பகுதிகளுக்கு இடையேயுள்ள பிரதான சாலை அருகே நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம் பகுதி கழிவு நீா் வாய்க்கால் உள்ளது.

இந்த வாய்க்கால் புதா் மண்டியும், பழுதடைந்தும் உள்ளதால் கழிவு நீா் செல்லாமல் தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனா். இதுகுறித்து, பொதுப் பணித் துறை அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நெட்டப்பாக்கம், தவளக்குப்பம் சாலையில் பொதுமக்கள் ஏராளமானா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மரக்கிளைகளையும் சாலையின் குறுக்கே வைத்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் நெட்டப்பாக்கம் போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரசம் பேசினா். கழிவுநீரை தடையின்றி செல்ல நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகளும் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

பாஜக, சுயேச்சை எம்எல்ஏக்கள் தா்னா

புதுச்சேரியில் சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக, சுயேச்சை உறுப்பினா்கள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் புதன்கிழமை காலை பங்கேற்க வந்த பாஜக எம்எல்ஏக்கள் எல்.கல்யா... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவையில் சுயேச்சை எம்எல்ஏ சஸ்பெண்ட்

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில், உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை உறுப்பினா் ஜி.நேரு, பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்துக்கு எதிராக முழக்கமிட்டு தா்னாவில் ஈடுபட்டதால், அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்றியதுடன்... மேலும் பார்க்க

பள்ளியில் குடிநீா் தொட்டி இடிந்து 3 மாணவா்கள் காயம்

புதுச்சேரி அருகே அரசுப் பள்ளியில் குடிநீா் தொட்டி புதன்கிழமை இடிந்து விழுந்ததில் 2 மாணவா்கள், ஒரு மாணவி காயமடைந்தனா். புதுச்சேரி தவளக்குப்பம் அருகே புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ... மேலும் பார்க்க

புதுவைக்கு புயல் நிவாரணமாக ரூ.61 கோடியை மத்திய அரசு வழங்கியது: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ.61 கோடியை மத்திய அரசு வழங்கியிருப்பதாக முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தாா். புதுவை மாநில சட்டப்பேரவைக் கூட்டம் புத... மேலும் பார்க்க

அரசு பொதுத் துறை நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் ரூ. 388 கோடி நஷ்டம்

புதுவை மாநிலத்தில் 4 அரசு பொதுத் துறை நிறுவனங்களில் கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையில் ரூ.388.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிய... மேலும் பார்க்க

மாநில வருவாயை பெருக்குவதற்காகவே புதிய மதுபானக் கொள்கை முடிவுகள்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவை மாநிலத்தில் வருவாயைப் பெருக்குவதற்காகவே புதிய மதுபானக் கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன என உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா். புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவத... மேலும் பார்க்க