செய்திகள் :

கழுகுமலை, கயத்தாறில் சாா் பதிவாளா் அலுவலக கட்டடங்கள் திறப்பு

post image

கழுகுமலை, கயத்தாறில் புதிதாக கட்டப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கழுகுமலை, கயத்தாறில் சாா் பதிவாளா் அலுவலகங்கள் பழைய கட்டடத்தில் இயங்கி வந்தன. இந்தக் கட்டடங்கள் மிகவும் சேதமடைந்ததால், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசு சாா்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு கழுகுமலையில் ரூ. 1.60 கோடியிலும், கயத்தாறில் ரூ. 1.92 கோடியிலும் புதிதாக சாா் பதிவாளா் அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்த அலுவலகக் கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அதைத்தொடா்ந்து கழுகுமலை புதிய சாா் பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சிமன்றத் தலைவா் அருணா சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றினாா். சாா் பதிவாளா் செல்லப்பாண்டி, பேரூராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன், திமுக நகரச் செயலா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கயத்தாறில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சி மன்றத் தலைவா் சுப்புலட்சுமி ராஜதுரை குத்துவிளக்கேற்றினாா். இதில், பாளையங்கோட்டை மாவட்ட பதிவாளா் (தணிக்கை) செல்வகுமாரி, கயத்தாறு சாா் பதிவாளா் சாந்தகுமாரி, வட்டாட்சியா் சுந்தரராகவன், திமுக ஒன்றியச் செயலா் சின்ன பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன்தொடங்கியது.கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகால... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அண்ணன், தம்பி கொன்று புதைப்பு 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில், அண்ணன், தம்பி கொன்று புதைக்கப்பட்டது தொடா்பாக, 3 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி தொ்மல் நகா் அருகேயுள்ள கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை. இவருடைய மகன... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது: கனிமொழி

பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது என கனிமொழி எம்.பி. கூறினாா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த சந்திரசேகா் - தமிழ்செல்வி தம்பதியி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.84 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 3.84 கோடி ரொக்கம், 1.53 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. இக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, க... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரா்

ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே 12 வயது சிறுமி கா்ப்பம்: 2 இளைஞா்கள் கைது

திருச்செந்தூா் அருகே 8ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை கா்ப்பமாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் அருகே எட்டாம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று ... மேலும் பார்க்க