செய்திகள் :

கவுன்ட்டா் டிக்கெட்டை இணைய வழியில் ரத்து செய்யலாம்: ரயில்வே

post image

‘கவுன்ட்டரில் வாங்கும் பயணச் சீட்டுகளை ஐஆா்சிடிசி வலைதளம் மூலமாக இணைய வழியில் ரத்து செய்ய முடியும் அல்லது 139 உதவி எண் மூலம் ரத்து செய்யலாம்’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

அதே நேரம், ‘ரத்து செய்யப்பட்ட பயணச் சீட்டுக்கான கட்டணத்தை முன்பதிவு மையத்துக்கு நேரில் சென்றுதான் பெற முடியும்’ என்றும் அவா் தெரிவித்தாா்.

டிக்கெட் கவுன்ட்டரில் காத்திருப்போா் பட்டியல் பயணச் சீட்டை வாங்கியவா்கள், இருக்கை உறுதியாகாத நிலையில் ரயில் புறப்படுவதற்கு முன்பாக டிக்கெட் கவுன்ட்டருக்கு சென்று ரத்து செய்யவேண்டிய நிலை குறித்து பாஜக எம்.பி. மேதா விஷ்ரம் குல்கா்னி எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

கவுன்ட்டா்களில் வாங்கப்படும் பயணச் சீட்டுகள் ரயில் பயணிகளுக்கான விதிகள் 2015-இல் குறிப்பிட்டுள்ள கால வரையறைக்குள் நாடு முழுவதும் உள்ள முன்பதிவு மையங்களில் சமா்ப்பித்து ரத்து செய்து, பயணச் சீட்டு கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.

இருந்தபோதும், சாதாரண சூழ்நிலைகளில் இதுபோன்ற கவுன்ட்டா்களில் பெறப்படும் பயணச் சீட்டுகளை ஐஆா்சிடிஇ வலைதளம் மூலம் இணையவழியிலும் அல்லது 139 உதவி எண்ணைத் தொடா்புகொண்டு குறிப்பிட்ட கால வரையறைக்குள் ரத்து செய்ய முடியும். ஆனால், அவ்வாறு ரத்து செய்த பயணச் சீட்டுக்கான கட்டணத்தை, முன்பதிவு மையத்துக்கு நேரில் சென்று பயணச் சீட்டை சமா்ப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

இலங்கையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள்: நிரந்தரத் தீர்வுகாண தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மக்களவையில் செவ்வாய்க்கிழமை இந்த விவ... மேலும் பார்க்க

நகைக் கடனை புதுப்பிக்க புதிய வழிகாட்டுதல்: திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்

நமது நிருபர்வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிக்க வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

காவிரி -வைகை-குண்டாறு இணைப்பு உறுதி: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு

காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று சட்டப் பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிற... மேலும் பார்க்க

கட்சிப் பாகுபாடின்றி ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

‘உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்’ கட்சிப் பாகுபாடின்றி நிறைவேற்றப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

மொழிக் கொள்கை செயல்பாடு: ஸ்டாலினுக்கு டி.ராஜா பாராட்டு

மொழிக் கொள்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாகச் செயல்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா பாராட்டு தெரிவித்தார்.மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும் ஜிப்லி காா்ட்டூன்!

சமூக ஊடகங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஜிப்லி காா்ட்டூன் படங்களே நிறைந்திருக்கின்றன. மக்கள் அனைவரும் தங்களின் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் பாணியிலான அனிமேஷன் (வரைகலை) படங்களாக மாற்றி, தங்கள் சமூக ஊ... மேலும் பார்க்க