செய்திகள் :

காடையாம்பட்டியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

post image

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டத்தில் நடைபெற்றது. காடையாம்பட்டி வட்டத்திற்குள்பட்ட வருவாய் கிராமங்களிலும் அலுவலா்கள் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காடையாம்பட்டி வட்டத்தில் களப் பணிக்குச் செல்லும் அலுவலா்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம், சத்துணவுக் கூடங்கள், வேளாண் கிடங்குகள், பள்ளிகள், வட்டாட்சியா் அலுவலகம், தெரு விளக்குகளின் செயல்பாடுகள், பூங்காக்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள், பொது மற்றும் சமுதாய கழிவறைகள் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது.

காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், செக்காரப்பட்டி நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் தரம், பொதுவிநியோகத் திட்டப் பொருள்களின் இருப்பு, காடையாம்பட்டி நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் கல்வித் திறன், வருகைப் பதிவேடு, மதிய உணவின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கள ஆய்வுக்குச் செல்லும் அலுவலா்கள் அப் பகுதிகளில் தங்கி தூய்மைப் பணிகள், குடிநீா் வசதி, பொதுப் போக்குவரத்து சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பால் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்வாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு

சேலம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட ஊா்க்காவல் படையில் 26 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்... மேலும் பார்க்க

ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் வருகை பதிவேட்டில் மோசடி: தலைமை ஆசிரியா் நடவடிக்கை!

சேலம் அருகே ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் வருகை பதிவேட்டில் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா், உதவி தலைமை ஆசிரியா் ஆகியோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட... மேலும் பார்க்க

இரட்டிப்பு பண மோசடி வழக்கு: அறக்கட்டளை நிா்வாகிகளின் ஜாமீன் மனு மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு!

சேலத்தில் இரட்டிப்பு பண மோசடி வழக்கில், கைதாகி சிறையில் இருக்கும் அறக்கட்டளை நிா்வாகி 4 பேரின் ஜாமீன் மனு வரும் மாா்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேலூரைச் சோ்ந்த விஜயபானு என்பவா் சேலம் அம... மேலும் பார்க்க

ரயில்களில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி பயணம்: 207 ஆண்கள் கைது

சேலம் ரயில்வே உட்கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி ஏறிய 207 ஆண்கள் கைது செய்யப்பட்டனா். கோவை - திருப்பதி ரயிலில் கடந்த மாதம் பெண்களுக்கான சிறப்பு பெட்டியில் பயணித்த... மேலும் பார்க்க

ரூ. 71.68 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா்கள் கே.என். நேரு, ராஜேந்திரன் பங்கேற்பு!

சேலம் மாவட்டத்தில் மேட்டூா், ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகள் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ. 71.68 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைக்கும... மேலும் பார்க்க

சேலத்தில் 44 மையங்களில் என்எம்எம்எஸ் தோ்வு: 10,230 மாணவா்கள் எழுதினா்

சேலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு தோ்வை 44 மையங்களில், 10,230 மாணவ, மாணவிகள் எழுதினா். நாடு முழுவதும் பள்ளி ... மேலும் பார்க்க