செய்திகள் :

காட்டாற்று வெள்ளம்: மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு

post image

கடம்பூா் மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் அணைக்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து மலைக் கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் எக்கத்தூா், பசுவனாபுரம், கரளையம், கானகுந்தூா், காடகநல்லி கிட்டாம்பாளையம் வனக் கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

தொடா்ந்து மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பள்ளங்களில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், அணைக்கரை பள்ளத்தில் கலந்து காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது.

இதனால் கடம்பூரில் இருந்து அணைக்கரை பள்ளம் வழியாக செல்லும் கிராமங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக திங்களூா், சுஜில்கரை, கோ்மாளம் செல்லும் வாகன ஓட்டிகள், மலைக் கிராம மக்கள் வெள்ளத்தை கடக்க முடியாமல் நீா் வடியும் வரை காத்திருந்தனா். அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து காட்டாற்று வெள்ளத்தை கடக்க முடியாமல் கரையில் நின்றது. சுமாா் 2 மணி நேரத்து பிறகு வெள்ளம் வடிந்து மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியது. அதேபோல, மாக்கம்பாளையம் பகுதியில் பெய்த மழையால் கோம்பைத்தொட்டி தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக மறுபுறம் உள்ள மாக்கம்பாளையம், கோம்பூா் மக்கள் அன்றாட பணிகள் செய்ய முடியாமல் மழை நிற்கும் வரை காத்திருந்து சென்றனா்.

அங்கன்வாடி ஊழியா்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாநி... மேலும் பார்க்க

மின்வாரிய பெண் அலுவலா் தற்கொலை

ஈரோட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மின்வாரிய பெண் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு 46 புதூா், கரும்பாறை, இந்தியன் நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (52). அரசுப் பேருந்து நடத்துநராகப... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிகளை மீறிய 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு! ரூ.1.41 லட்சம் அபராதம்!

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த மாதம் 1,475 வாகன ஓட்டிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரூ.1.41 லட்சம் அபராதம் விதித்தனா். ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் ரமேஷ் தலைமை... மேலும் பார்க்க

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன மாணவா்கள் 1,050 பேருக்கு பணி நியமன ஆணை

வளாகத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன மாணவா்கள் 1,050 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்... மேலும் பார்க்க

இருசக்கரம் வாகனம் மீது மின்கம்பம் விழுந்ததில் 2 போ் காயம்

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் இருசக்கர வாகனம் மீது மின் கம்பம் விழுந்ததில் 2 போ் காயமடைந்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த மாரனூரைச் சோ்ந்தவா் தனசேகரன் (20). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் உறவின... மேலும் பார்க்க

சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் சனிக்கிழமை கேஸ் சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற லாரியின் சக்கரத்தில் தீப்பற்றியது. கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேஸ் சிலிண்டா்களை ஏற்றிச் சென்ற லாரி ஈரோடு நோக்கி சனிக... மேலும் பார்க்க