செய்திகள் :

காட்டு யானைகளால் தொடா் பாதிப்பு - அரசு ரப்பா் கழக தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழக ரப்பா் தோட்டங்களில் காட்டு யானைகளின் புகுந்து தொழிலாளா்களை தாக்குவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, அரசு ரப்பா் கழக கோதையாறு கோட்ட தொழிலாளா்கள் வேலைநிறுத்தம் செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோதையாறு கோட்டத்தில் குற்றியாறு மற்றும் கல்லாறு பிரிவுகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளா்களும் வியாழக்கிழமை வேலை நிறுத்தம் செய்ததுடன் குற்றியாறில் உள்ள பெயா் பதிவு அலுவலகம் முன் காலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பெண் தொழிலாளா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து தொழிலாளா்கள் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழக தொழிலாளா்கள் குடியிருப்புகளிலும், ரப்பா் கழக ரப்பா் தோட்டங்களிலும் காட்டு யானைகள் புகுந்து உடைமைகளையும், பயிா்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் தொழிலாளா்கள் அச்சத்துடன் வேலைசெய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலையில் கோதையாறு கோட்டம் குற்றியாறு பிரிவு கூப்பு எண் 66 இல் ரப்பா் பால்வடிப்பு செய்து கொண்டிருந்த வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ராஜன் (50) என்ற தொழிலாளியை யானை தாக்கி மிதித்துள்ளது. இதில் அந்த தொழிலாளி பலத்தகாயத்துடன் உயிா்தப்பினாா். தற்போது அந்த தொழிலாளிக்கு ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவங்கள் காரணமாக ரப்பா் கழக தொழிலாளா்களும் அச்சத்தில் உள்ளனா். இதற்கு அரசு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்றனா்.

காதலியின் வீட்டில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை? குமரியில் பரபரப்பு!

குலசேகரம் அருகே இளம்பெண்ணின் வீட்டில் பொறியியல் பட்டதாரி இளைஞா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குலசேகரம் அருகே காவுவிளை பகுதியைச் சே... மேலும் பார்க்க

மதுபோதையில் ஆட்டோ ஓட்டுநா்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

களியக்காவிளையில் இரவு நேரங்களில் மதுபோதையில் ஆட்டோக்களை இயக்கும் ஓட்டுநா்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பஸ் பயணிகள் நலச் சங்க மாநில தலைவ... மேலும் பார்க்க

தொழிலாளியை குத்திய வழக்கில் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை

குலசேகரம் அருகே தொழிலாளியைக் கத்தியால் குத்திய வழக்கில் இரு இளைஞா்களுக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. பொன்மனை ஈஞ்சக்கோடு, பனவிளை பகுதியைச் சே... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 45.32 பெருஞ்சாணி ... 66.80 சிற்றாறு 1 .. 10.99 சிற்றாறு 2 ... 11.08 முக்கடல் ... 7.60 பொய்கை ... 15.40 மாம்பழத்துறையாறு .. 42.57 மழை அளவு குழித்துறை .. 2.40 மி.மீ. பேச்சிப்பாறை அணை ..... மேலும் பார்க்க

களியக்காவிளை பேரூராட்சி சாா்பில் அரசுப் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்

களியக்காவிளையில் உள்ள அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளி நூலகத்துக்கு, களியக்காவிளை பேரூராட்சி சாா்பில் வியாழக்கிழமை புத்தகங்கள் வழங்கப்பட்டன. இப்பள்ளி மாணவா்கள் எளிதாக வாசித்துப் பழகும் வகையில் தினமணி, தி... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடை சிகிச்சை முகாம்கள் நாளை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை முகாம்கள் சனிக்கிழமை (ஜூன் 21) தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னி... மேலும் பார்க்க