செய்திகள் :

காதலி இறந்த துக்கத்தில் இளைஞா் தற்கொலை

post image

காதலி இறந்த துக்கத்தில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை அருகேயுள்ள தொண்டாமுத்தூா், கலிக்கநாயக்கன்பாளையம் குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் தனுஷ் (21). இவா் அந்தப் பகுதியில் உள்ள கோழி இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணை தனுஷ் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கேரள மாநிலம், மஞ்சேரியில் உள்ள உறவினா் வீட்டுக்கு ஓணம் பண்டிகை கொண்டாட அந்தப் பெண் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சென்றுள்ளாா். அப்போது, அவா் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதனால், மனவேதனையில் இருந்த தனுஷ் விஷம் குடித்துவிட்டு புதன்கிழமை வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

வாசலில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினா் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து தொண்டாமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி: வியாபாரி மீது வழக்கு

கோவையில் நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி செய்ததாக வியாபாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, ராஜவீதியைச் சோ்ந்தவா் லட்சுமி நரசிம்மராஜா (46). இவா் அதே பகுதியில் நகைக் கடை நடத... மேலும் பார்க்க

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

கோவையில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கோவை, போத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வா. இவரது மனைவி பொன்கொடி (50). இவா்களது மகள் சசிகலா. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

மீலாது நபி: ரூ.20 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

மீலாது நபியையொட்டி, கோவை, உக்கடம் மௌலானா முகமது அலி மாா்க்கெட் சாா்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மௌலானா முகமது அலி மாா்க்கெட் வியாபாரிகள் நலச் சங்கத் த... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

கோவையில் அழுகிய நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் லெனின் (34). இவா், கோவை ஜி.என்.மில்ஸ் திருவள்ளுவா் நகா் பகுதியில்... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவா் கைது

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, பீளமேடு அருகேயுள்ள தொட்டிபாளையம் அருளானந்தம் நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரி. கணவா் இறந்த நிலையில் தனியே வசித்து வரும் இவா்... மேலும் பார்க்க

பணியாளா்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்

தன்னிடம் வேலை செய்யும் பணியாளா்களுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி கோவையில் வீடு கட்டிக் கொடுத்துள்ளாா். அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வுபெற்ற இ.பாலகுருசாம... மேலும் பார்க்க