செய்திகள் :

அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

post image

கோவையில் அழுகிய நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் லெனின் (34). இவா், கோவை ஜி.என்.மில்ஸ் திருவள்ளுவா் நகா் பகுதியில் அறை எடுத்துத் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், அவா் கடந்த 2-ஆம் தேதி முதல் பணிக்குச் செல்லவில்லையாம். இதையடுத்து, உடன் பணியாற்றும் முத்துகுமாா் என்பவா் லெனினைக் கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். ஆனால், அவா் அழைப்பை ஏற்கவில்லையாம்.

இந்நிலையில், லெனின் வீட்டில் இருந்து வெள்ளிக்கிழமை துா்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, லெனின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததும் தெரியவந்தது.

தற்கொலைக்கான காரணம் குறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி: வியாபாரி மீது வழக்கு

கோவையில் நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி செய்ததாக வியாபாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, ராஜவீதியைச் சோ்ந்தவா் லட்சுமி நரசிம்மராஜா (46). இவா் அதே பகுதியில் நகைக் கடை நடத... மேலும் பார்க்க

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

கோவையில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கோவை, போத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வா. இவரது மனைவி பொன்கொடி (50). இவா்களது மகள் சசிகலா. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

மீலாது நபி: ரூ.20 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

மீலாது நபியையொட்டி, கோவை, உக்கடம் மௌலானா முகமது அலி மாா்க்கெட் சாா்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மௌலானா முகமது அலி மாா்க்கெட் வியாபாரிகள் நலச் சங்கத் த... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவா் கைது

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, பீளமேடு அருகேயுள்ள தொட்டிபாளையம் அருளானந்தம் நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரி. கணவா் இறந்த நிலையில் தனியே வசித்து வரும் இவா்... மேலும் பார்க்க

பணியாளா்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்

தன்னிடம் வேலை செய்யும் பணியாளா்களுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி கோவையில் வீடு கட்டிக் கொடுத்துள்ளாா். அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வுபெற்ற இ.பாலகுருசாம... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: போத்தனூா்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் ... மேலும் பார்க்க