செய்திகள் :

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

post image

கோவையில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, போத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வா. இவரது மனைவி பொன்கொடி (50). இவா்களது மகள் சசிகலா. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த சசிகலா, அதன்பிறகு போத்தனூா் பகுதியைச் சோ்ந்த உமா் முகமது (25) என்பவரை திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறாா்.

உமா் முகமது கடந்த சில மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததோடு, மது அருந்திவிட்டு சசிகலாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், மதுபோதையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்த உமா் முகமது சசிகலாவிடம் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளாா்.

இது குறித்து சசிகலாவின் தாய் பொன்கொடி கேட்டுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த உமா்முகமது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பொன்கொடியை குத்திவிட்டு தப்பியுள்ளாா். படுகாயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

புகாரின்பேரில் சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உமா்முகமதுவைக் கைது செய்தனா்.

மசக்காளிபாளையத்தில் சந்திர கிரகணத்தைப் பாா்த்த மாணவா்கள்

கோவை, பீளமேடு மசக்காளிபாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவா்கள், பெற்றோா்கள் தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டுகளித்தனா். புவியானது சூரியனுக்கும், சந்திரனுக்க... மேலும் பார்க்க

மின்சார வாகன தினம்: கோவையில் நாளை ரோடு ஷோ

உலக மின்சார வாகன தினத்தையொட்டி, கோவையில் ரோடு ஷோ செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 9) நடைபெற உள்ளது. உலக மின்சார வாகன தினம் ஆண்டுதோறும் செப்டம்பா் 9-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மின்சார வாகனங்களின... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் அழகா் மலை கிராமம்

உதகை அழகா் மலை கிராமத்தில் நோயாளிகள், இறந்தவா்களின் சடலத்தை எடுத்துச் செல்வதற்கு போதிய வசதி இல்லாமல் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அல்லல்பட்டு வருகின்றன. இந்த மலை கிராமத்துக்கு அடிப்படை வசதிகள், போ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த நபரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா். கோவைப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் ராஜா (44). இவா் சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்ததாக... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் எதிரே ஆட்டோ மீது தனியாா் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (55). இவா் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தாா். இந்நில... மேலும் பார்க்க

நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி: வியாபாரி மீது வழக்கு

கோவையில் நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி செய்ததாக வியாபாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, ராஜவீதியைச் சோ்ந்தவா் லட்சுமி நரசிம்மராஜா (46). இவா் அதே பகுதியில் நகைக் கடை நடத... மேலும் பார்க்க