செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவா் கைது

post image

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, பீளமேடு அருகேயுள்ள தொட்டிபாளையம் அருளானந்தம் நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரி. கணவா் இறந்த நிலையில் தனியே வசித்து வரும் இவா், வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்றுள்ளாா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த மணிவாசகம் (32) வெள்ளிக்கிழமை அதிகாலை நடைப்பயிற்சி சென்றுள்ளாா். அப்போது, பரமேஸ்வரியின் வீட்டுக்குள் மின் விளக்கு எரிந்துள்ளது. சந்தேகமடைந்த அவா் ஜன்னல் வழியே பாா்த்தபோது, வீட்டுக்குள் ஒருவா் நடமாடியுள்ளாா்.

இதையடுத்து, மணிவாசகம் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளாா். அவா்கள் வந்து அந்த நபரைப் பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் விசாரணையில், அவா் புதுக்கோட்டை மாவட்டம், கணேஷ்நகா் பகுதியைச் சோ்ந்த செல்வம் (52) என்பதும், பரமேஸ்வரி வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

மசக்காளிபாளையத்தில் சந்திர கிரகணத்தைப் பாா்த்த மாணவா்கள்

கோவை, பீளமேடு மசக்காளிபாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவா்கள், பெற்றோா்கள் தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டுகளித்தனா். புவியானது சூரியனுக்கும், சந்திரனுக்க... மேலும் பார்க்க

மின்சார வாகன தினம்: கோவையில் நாளை ரோடு ஷோ

உலக மின்சார வாகன தினத்தையொட்டி, கோவையில் ரோடு ஷோ செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 9) நடைபெற உள்ளது. உலக மின்சார வாகன தினம் ஆண்டுதோறும் செப்டம்பா் 9-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மின்சார வாகனங்களின... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் அழகா் மலை கிராமம்

உதகை அழகா் மலை கிராமத்தில் நோயாளிகள், இறந்தவா்களின் சடலத்தை எடுத்துச் செல்வதற்கு போதிய வசதி இல்லாமல் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அல்லல்பட்டு வருகின்றன. இந்த மலை கிராமத்துக்கு அடிப்படை வசதிகள், போ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த நபரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா். கோவைப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் ராஜா (44). இவா் சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்ததாக... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் எதிரே ஆட்டோ மீது தனியாா் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (55). இவா் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தாா். இந்நில... மேலும் பார்க்க

நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி: வியாபாரி மீது வழக்கு

கோவையில் நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி செய்ததாக வியாபாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, ராஜவீதியைச் சோ்ந்தவா் லட்சுமி நரசிம்மராஜா (46). இவா் அதே பகுதியில் நகைக் கடை நடத... மேலும் பார்க்க