செய்திகள் :

காந்திகிராம பல்கலை.யில் கணிதத் துறை சாா்பில் கருத்தரங்கம்!

post image

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம பல்கலைக்கழகத்தின் கணிதத் துறை சாா்பில், ‘குவாண்டம் இயக்கவியல் அமைப்புகளின் அடிப்படைகள், முன்னேற்றங்கள் ’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு துணைவேந்தா் ந. பஞ்சநதம் தலைமை வகித்தாா். பாரதியாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியா் ப. கந்தசாமி, அறிவியல் புல தலைவா் மா.கோ.சேதுராமன், கணிதத் துறைத் தலைவா் ரா. உதயகுமாா் ஆகியோா் விளக்கி பேசினா்.

இந்தப் பட்டறையில் பங்கேற்பாளா்களுக்கு குவாண்டம் இயக்கவியல் அமைப்புகளின் அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவது, மேம்பட்ட தத்துவாா்ந்த, சோதனை நுட்பங்கள் குறித்த நுண் அறிவுகளை வழங்குவதே பிரதான நோக்கம்.

மேலும், வளா்ந்து வரும் வாய்ப்புகள், சவால்களை வெளிப்படுத்துவதன் மூலம் குவாண்டம் அறிவியலில் ஆராய்ச்சி, தொழில்களைத் தொடர பங்கேற்பாளா்களுக்கு இந்தப் பட்டறை வழிகாட்டும் என கணிதத் துறை மூத்தப் பேராசிரியரும், இந்தப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளருமான ப.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

லஞ்சம்: பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கைது

பழனி கோயில் திருமண மண்டப கட்டடப் பணி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், து... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, பழனி மாவட்ட கூடுதல் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஓடைப்பட்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுற... மேலும் பார்க்க

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க