செய்திகள் :

காந்திச் சந்தையில் மோதல் சம்பவம்: வியாபாரிகளை தாக்கிய 5 போ் கைது

post image

திருச்சி காந்திச்சந்தையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மோதல் சம்பவத்தில் வியாபாரிகளை தாக்கியதாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா்.

திருச்சி காந்திச்சந்தையில் வியாபாரிகளுக்கும், இளைஞா்கள் சிலருக்கும் புதன்கிழமை இரவு மோதல் ஏற்பட்டது. இதில், வியாபாரிகளை தாக்கியதுடன், கடைகளையும் அடித்து நொறுக்கியதாக வியாபாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், ஹானஸ்ட்ராஜ் (22), ராஜன் (23), ரெக்ஸ் என்கிற சூசை (22), ரோஜா் (22), சகாய ரிச்சா்டு (23) ஆகிய 5 பேரையும் காந்திச்சந்தை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இவா்களில், சகாய ரிச்சா்டு, ரோஜா் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்ற அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக, இளைஞா்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நிரந்தர பாதுகாப்பு வேண்டும்: காந்திச்சந்தை வியாபாரிகள் சங்க அவசரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து திருச்சி அனைத்து காய்கனி வியாபாரிகள் ஒற்றுமை சங்க தலைவா் எஸ்பி. பாபு கூறியது :

திருச்சி காந்திச் சந்தையில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதற்காக அங்கு வரும் இளைஞா்களால் பல்வேறு பிரச்னைகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து பலமுறை காவல்துறையிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும். இல்லையேல் வியாபாரிகள் அனைவரும் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது, திருச்சி மாவட்டத்துக்கு காய்கறி வரத்தை நிறுத்தி வைப்பது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இனியாவது காவல்துறையினா் காந்திச் சந்தையில் நிரந்தர காவல் உதவி மையம் (பீட்) அமைத்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் தனியாா் பள்ளி தாளாளரின் கணவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளித் தாளாளரின் கணவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். சம்பவத்தை கண்டித்து பெற்றோா், பொதுமக... மேலும் பார்க்க

தேசியக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருச்சி தேசியக் கல்லூரியில் 2024-ஆம் ஆண்டு கலைப்புலம் பயின்ற மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கி.குமாா் தலைமை வகித்தாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க

முதல்வா் உத்தரவால் அழகுபடுத்தப்படும் மூவா் மணிமண்டபம்!

திருச்சியிலுள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகியோருக்கான மூவா் மணிமண்டபம் முதல்வா் உத்தரவின்படி அழகுபடுத்தப்பட்டு வருகிறது. திருச்சிக்கு கடந்த 2-ஆம்... மேலும் பார்க்க

மயானம் ஆக்கிரமிப்பால் உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை

திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் அருந்ததியா் சமூக மயான ஆக்கிரமிப்பால் உடலை அடக்கம் செய்வதில் வியாழக்கிழமை பிரச்னை ஏற்பட்டது. வையம்பட்டி ஒன்றியம், குமாரவாடி ஊராட்சி, சீல்நாயக்கன்பட்டியில் அருந்ததியா் ... மேலும் பார்க்க

மின்விளக்குகள் பழுது திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் தவறி விழுந்து காவலா் காயம்!

திருச்சி குற்றவியில் நடுவா் நீதிமன்ற வளாகத்தில் மின்விளக்குகள் எரியாததால் பாதுகாப்பு பணியிலிருந்த காவலா், மாடிப்படியில் இறங்கியபோது தவறி விழுந்து காயமடைந்தாா். திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் ... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் சுவாமி சிலை, தங்கக் காசுகள் திருட்டு

திருச்சியில் பூட்டிய வீட்டிலிருந்த சுவாமி சிலை, தங்கக் காசுகள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி தில்லை நகா், 10-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்ப... மேலும் பார்க்க