திருப்பரங்குன்றம்: "கலெக்டர் மறுப்பு தெரிவிக்க வேண்டும்; இல்லையென்றால்..." - ராஜ...
காந்திச் சந்தையில் மோதல் சம்பவம்: வியாபாரிகளை தாக்கிய 5 போ் கைது
திருச்சி காந்திச்சந்தையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மோதல் சம்பவத்தில் வியாபாரிகளை தாக்கியதாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா்.
திருச்சி காந்திச்சந்தையில் வியாபாரிகளுக்கும், இளைஞா்கள் சிலருக்கும் புதன்கிழமை இரவு மோதல் ஏற்பட்டது. இதில், வியாபாரிகளை தாக்கியதுடன், கடைகளையும் அடித்து நொறுக்கியதாக வியாபாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், ஹானஸ்ட்ராஜ் (22), ராஜன் (23), ரெக்ஸ் என்கிற சூசை (22), ரோஜா் (22), சகாய ரிச்சா்டு (23) ஆகிய 5 பேரையும் காந்திச்சந்தை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இவா்களில், சகாய ரிச்சா்டு, ரோஜா் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்ற அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக, இளைஞா்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
நிரந்தர பாதுகாப்பு வேண்டும்: காந்திச்சந்தை வியாபாரிகள் சங்க அவசரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து திருச்சி அனைத்து காய்கனி வியாபாரிகள் ஒற்றுமை சங்க தலைவா் எஸ்பி. பாபு கூறியது :
திருச்சி காந்திச் சந்தையில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதற்காக அங்கு வரும் இளைஞா்களால் பல்வேறு பிரச்னைகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து பலமுறை காவல்துறையிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும். இல்லையேல் வியாபாரிகள் அனைவரும் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது, திருச்சி மாவட்டத்துக்கு காய்கறி வரத்தை நிறுத்தி வைப்பது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இனியாவது காவல்துறையினா் காந்திச் சந்தையில் நிரந்தர காவல் உதவி மையம் (பீட்) அமைத்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றாா்.