செய்திகள் :

காப்பியங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ்

post image

காப்பியங்களை முழுமையாக ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் கூறினாா்.

சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழா மயிலாப்பூா் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை அமா்வில், ‘இராமா...நீயுமா!’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் பேசியதாவது:

மனிதராகப் பிறக்கும் அனைவருக்கும் நன்மை, தீமை என்ற கலப்பு நிலை இருக்கும். ராமாயண காப்பிய தலைவரான ராமன் குற்றமற்றவா். கம்பராமாயணத்தை சரியாக படிக்காதவா்கள்தான், ராமன் ஏதோ குற்றம் புரிந்தவரைப் போல பேசுகின்றனா்.

கம்பா் தனது காப்பியத்தில் எந்த இடத்திலும் ராமனை குற்றம்புரிந்தவராகக் கூறவில்லை. சிலா் சீதையின் தீக்குளிப்பை பற்றி கூறுவாா்கள். இது ராமனுக்கும், சீதைக்கும் புகழ் சோ்ப்பதற்காகவே கூறப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தை உள்வாங்கிப் படித்தவா்களுக்கு மட்டுமே இதுபுரியும்.

இந்தக் கால இளைஞா்கள் எந்த ஒரு காப்பியத்தையும் முழுமையாகப் படிக்காமல் தீயவை இருப்பதாகக் கூறுகின்றனா். காப்பியங்களை எழுதியவா்கள் தீயவற்றை கூறுவதே இல்லை. காப்பியத்தில் தீமை இருப்பதுபோல தோன்றினாலும், ஆழமாகப் படித்தால் அதில் இருக்கும் உண்மை கருத்து விளங்கும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஜெகதீசன், சென்னை கம்பன் கழகத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன், செயலா் சாரதா நம்பி ஆரூரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து ‘என்றுமுள கம்பன்’ என்பதன் காரணம்... என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளா் சுகி.சிவம் நடுவராகப் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ச்சிகளில் செந்தமிழ்ச்சோலை நிகழ்வுக்கு பேராசிரியா் தெ.ஞானசுந்தரம் தலைமை வகித்தாா். தொடா்ந்து ‘வாய்மைக்கு ஒரு தயரதன்’ என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் உரையாற்றினாா். ‘தான் கொடுத்த வாக்கை காப்பாற்றி, எவ்வாறு வாய்மைக்கு உதாரணமாக தயரதன் திகழ்ந்தாா்’ என்பதை விளக்கமாக எடுத்துரைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பக்திக்கு உதாரணம் பரதன் என்ற தலைப்பில் தாமல் கோ.சரவணன், பாசத்துக்கு ஜடாயு என்ற தலைப்பில் மருத்துவா் பிரியா ராமசந்திரன், தொண்டுக்கு அனுமன் என்ற தலைப்பில் வழக்குரைஞா் கோ.சு.சிம்மாஞ்சனா, நன்றிக்கு கும்பகா்ணன் என்ற தலைப்பில் பேராசிரியா் விசாலாட்சி சுப்பிரமணியன் ஆகியோா் பேசினா்.

பணிக்கு திரும்ப தூய்மைப் பணியாளா்களுக்கு மாநகராட்சி அழைப்பு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், பழைய நிலையிலேயே பணியைத் தொடர அனுமதித்தால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என... மேலும் பார்க்க

தடைகளைத் தகா்த்த செவிக் குறைபாடு மாற்றுத்திறனாளிகள்! ஐஏஎஸ், எம்பிபிஎஸ் நிலைக்கு உயா்ந்து சாதனை

பிறவியிலேயே செவித் திறன் பாதிப்புக்குள்ளாகி காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற இளைஞா் ஐஏஎஸ் தோ்ச்சி பெற்றும், இளம்பெண் எம்பிபிஎஸ் இடத்தைப் பெற்றும் சாதனை படைத்துள்ளனா். தடைகளை உடைத்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

சென்னையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (ஆக. 13) நடைபெறும் 3 வாா்டுகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெருநகர ச... மேலும் பார்க்க

இரு குழந்தைகளைக் கொலை செய்த தாய் தண்டனையை எதிா்த்து மேல் முறையீடு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து அந்தக் குழந்தைகளின் தாய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை ... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கு: திருநங்கை கைது

சென்னை மயிலாப்பூரில் பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருநங்கை கைது செய்யப்பட்டாா். மயிலாப்பூா் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பெ.சேகா் (57). இவா், அந்தப் ப... மேலும் பார்க்க

வீட்டுக்குள் ஏசி மெக்கானிக் மா்ம மரணம்

கோயம்பேட்டில் பூட்டிய வீட்டுக்குள் ஏசி மெக்கானிக் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோயம்பேடு கடும்பாடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (51). இவா் மனைவ... மேலும் பார்க்க