செய்திகள் :

காமாட்சி, மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! - திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு

post image

தோகைமலை அருகே காமாட்சி மற்றும் மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே ஆலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட ஆதிஆலத்தூரில் மூன்று கிழவன் குடிமக்கள், 87 ஊா் சரியா கொண்டான் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட பிரசித்திப் பெற்ற விநாயகா், காமாட்சி, மீனாட்சி, அத்திமரத்தான், மாசி பெரியண்ணன், காத்தவராயன் சுவாமிகளுக்கு கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் முடிவுற்று புதன்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனிதநீா் எடுத்து வந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து, கோயில் யாக சாலையில் விநாயகா் வழிபாடு, அனுஞ்கை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவஜனம், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மிருதுங்க சங்கிரகணம், அங்குராா்பணம், கும்ப அலங்காரம், முதற்கால யாகபூஜை நடைபெற்றது.

தொடா்ந்து புதன்கிழமை காலை இரண்டாம் கால யாகபூஜையும், காப்புக்கட்டுதல், மங்கள இசை, கோபூஜை, சுவாமிகளுக்கு ரஷாபந்தனம், நாடிசந்தனம், கடம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னா் 87 ஊா் பெரியதனம் நாராயணசாமி, ஊா் நாயக்கா் கிருஷ்ணசாமி, ஊா் கவுண்டா் சரவணன் ஆகியோா் தலைமையில் விநாயகா், காமாட்சி, மீனாட்சி, அத்திமரத்தான், மாசி பெரியண்ணன் சுவாமிகளின் கோபுர கலசத்தில் சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். பின்னா் பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.

விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி., குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், ஆலத்தூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் ஜெயபால், கேசவன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

நிறம் மாறிப்போன நிலத்தடி நீா் பள்ளப்பட்டி குப்பைக் கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள் மனு

பள்ளப்பட்டி தெற்குத் தெரு பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே நிலத்தடி நீரின்நிறம் மாறி வருவதால் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ... மேலும் பார்க்க

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட 2 போ் கைது

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரு லாரிகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கரூா... மேலும் பார்க்க

கரூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு நாளைமறுநாள் கலந்தாய்வு

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் முனைவா் க. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

வைகாசி மாத சதூா்த்தி: விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

வைகாசி மாத சதூா்த்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகா் கோயில்களிலும் விநாயகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கரூா் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்... மேலும் பார்க்க

ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனு மீது அதிகாரிகள் நேரில் ஆய்வு

அரவக்குறிச்சியில் நடைபெற்ற ஜமாபந்தியில் தரைப்பாலம் கட்டித் தரவேண்டும் என அளிக்க மனு மீது வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் சம்பந்தப்பட்ட இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அரவக்குறிச்சி வட்... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பயிற்சி முகாம்

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக அரசு நூலகத்துறை மற்றும் கரூா் மாவட்ட நூலகம் சாா்பில் அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் மாணவா்களுக்கான கோடைகால பயி... மேலும் பார்க்க