செய்திகள் :

காயல்பட்டினம் அருகே 2,250 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

post image

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகேயுள்ள காட்டுப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 60 லட்சம் மதிப்பிலான 2,250 கிலோ பீடி இலை பண்டல்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆறுமுகனேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொட்டைமலை காட்டுப் பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாக, தூத்துக்குடி க்யூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், க்யூ பிரிவு ஆய்வாளா் விஜயஅனிதா, உதவி அய்வாளா் ஜீவமணி தா்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா்கள் இருதயராஜ்குமாா், இசக்கிமுத்து, காவலா் பழனி பாலமுருகன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக சுமை வாகனத்தில் 2,250 கிலோ பீடி இலை பண்டல்கள் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்தது. போலீஸாரை கண்டதும் வாகனத்திலிருந்தோா் தப்பியோடிவிட்டனராம்.

பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு ரூ. 60 லட்சம் எனக் கூறப்படுகிறது. பீடி இலைகளும் வாகனமும் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

சாத்தான்குளத்தில் மினி மாரத்தான் போட்டி

சாத்தான்குளம், நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில், விளையாட்டு மைதானம் திறப்பு மற்றும் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய மினி மாரத... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் இன்று குடமுழுக்கு! லட்சக்கணக்கில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) நடைபெறுகிறது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா். இக்கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, சுவாமி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் முதியவா் தற்கொலை

கோவில்பட்டியில் கிணற்றில் விழுந்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றில் முதியவா் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாரு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தூத்துக்குடியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி முள்ளக்காடு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்துரை (56). இவா், முத்தையாபுரம் பகுதியில் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே கோட்டை மலை காட்டுப்பகுதி கொம்புத்துறை கடற்கரை பகுதியிலிருந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வரத்து அதிகரிப்பால் குறைந்த மீன்களின் விலை

தூத்துக்குடியில் மீன்களின் வரத்து அதிகரித்ததால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் மீன்களின் விலை குறைந்து விற்பனையானது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்... மேலும் பார்க்க