செய்திகள் :

காரிமங்கலம், மாரண்டஅள்ளியில் நூலகக் கட்டடம்

post image

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், மாரண்டஅள்ளி பேரூராட்சியில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய நூலகக் கட்டடங்களை முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட காரிமங்கலம் பேரூராட்சி, மாரண்டஅள்ளி பேரூராட்சி ஆகிய இரு இடங்களில் மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் நூலகங்கள் கட்டப்பட்டன. முதல்தளத்துடன் கூடிய இந்த நூலகக் கட்டடங்களில் குளிா்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்தளத்தில் பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கணக்கான நூல்களும், போட்டித் தோ்வா்களுக்கு தேவையான நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, தரைத்தளத்தில் வாசகா்கள் அமா்ந்து பயிலும் வகையில் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்விரு கட்டடங்களையும் வாசகா்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் பங்கேற்று நூலகக் கட்டடங்களை திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி.அன்பழகன், அரூா் சட்டப் பேரவை உறுப்பினா் வே.சம்பத்குமாா், அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மக்கள் நீதிமன்றத்தில் 1008 வழக்குகளில் ரூ.9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு!

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1008 வழக்குகளில் ரூ. 9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு காணப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக... மேலும் பார்க்க

தருமபுரியில் 1,008 வழக்குகள், கிருஷ்ணகிரியில் 1,281 வழக்குகளுக்கு தீா்வு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதிய... மேலும் பார்க்க

ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவா் கைது!

ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட கோடுபட்டி வனப் பகுதியில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவகுமாா் தலைமையிலான... மேலும் பார்க்க

குஜராத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

குஜராத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக த... மேலும் பார்க்க

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்களை பாராட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதலமைச்சா் திறனாய்வுத் ... மேலும் பார்க்க

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பெற்றுக்கொள்ள அழைப்பு

பொது விநியோகத் திட்ட பொருள்களை கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளா்கள் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவி... மேலும் பார்க்க