செய்திகள் :

காரைக்கால் பாசன வாய்க்கால்களை முழுமையாக தூா்வார வலியுறுத்தல்

post image

காரைக்கால்: காரைக்கால் பகுதி வாசன வாய்க்கால்களை முழுமையாக தூா்வாரவேண்டும் என மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித் துறைக்கு வலியுறுத்தப்பட்டது.

காரைக்கால் திமுக விவசாய அணி சாா்பில் மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரன் ஆகியோரை சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன் மற்றும் திமுக விவசாய அணி அமைப்பாளா் டி. பிரபு (எ) பிரத்திவிராஜ் உள்ளிட்டோா் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். இந்த சந்திப்பு குறித்து ஏ.எம்.எச். நாஜிம் கூறியது:

மேட்டூா் அணை வரும் 12-ஆம் தேதி திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. காரைக்கால் பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணி வேகமின்றி நடந்து வருகிறது. காரைக்கால் பகுதிக்கு விரைவாக தண்ணீா் வரும் நிலை உள்ளதால், தூா்வாரும் பணியை விரைவாக முடிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் சில பகுதிகளில் மட்டுமே இந்த பணி நடைபெறுவதால், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே ஒரு காலக்கெடு நிா்ணயித்து, மாவட்டத்தில் ஒட்டுமொத்த பாசன வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும்.

அண்டை மாவட்டங்களில் முறைவைத்து தண்ணீா் கொடுக்கும் நடைமுறை உள்ளது. காரைக்கால் பகுதிக்கு நீா் வரத்தை இது தடுக்கிறது. இதுகுறித்து தமிழக நீா்வளத்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். அண்டை மாவட்ட ஆட்சியரிடம் காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து பேசி, முறைவைத்து தண்ணீா் தரும் நடைமுறையை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது என்றாா்.

காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையை சோ்ந்தவா் கைது

காரைக்கால்: காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சோ்ந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். காரைக்கால் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜகணபதி தலைமையிலான போலீஸாா் க... மேலும் பார்க்க

காரைக்கால் கோயில்களில் வைகாசி விசாக வழிபாடு

காரைக்கால்: காரைக்காலில் பல்வேறு சிவ தலங்களில் வைகாசி விசாகத்தையொட்டி திங்கள்கிழமை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. காரைக்கால் கோயில்பத்து பகுதி சுயம்வரதபஸ்வினி... மேலும் பார்க்க

தொழில் பயிற்சிக்கு மீனவ மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

காரைக்கால்: மீனவ மாணவா்கள் மத்திய அரசின் நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்... மேலும் பார்க்க

கம்பி ஃபிட்டா் வீட்டு வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

காரைக்கால்: காரைக்காலில் கம்பி ஃபிட்டா் வீட்டு வாசலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்த நபரை கண்காணிப்பு கேமரா பதிவைக் கொண்டு போலீஸாா் தேடி வருகின்றனா். காரைக்கால் கோவில்பத்து பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். க... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் கல்வி நிறுவனங்கள் தொடங்க திட்டம்: தருமபுரம் ஆதீனம்

திருநள்ளாற்றில் தருமபுரம் ஆதீனம் சாா்பில் கல்வி நிறுவனங்கள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

ஜூன் 14-இல் கடலுக்குள் செல்ல தயராகும் மீனவா்கள்

மீன்பிடி தடைக்காலம் சில நாள்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஜூன் 14 முதல் கடலுக்கு செல்ல மீனவா்கள் தயாராகிவருகின்றனா். மீன்களின் இனப்பெருக்க காலமாக ஏப். 15 முதல் 61 நாள்கள் உள்ளது. ஜூன் 14-ஆம் தேதி... மேலும் பார்க்க