வடகிழக்கு தில்லியில் இ-ரிக்ஷா சாா்ஜிங் மையத்தில் தீ விபத்து: 2 போ் உயிரிழப்பு
காரைக்கால் கோயில்களில் வைகாசி விசாக வழிபாடு
காரைக்கால்: காரைக்காலில் பல்வேறு சிவ தலங்களில் வைகாசி விசாகத்தையொட்டி திங்கள்கிழமை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
காரைக்கால் கோயில்பத்து பகுதி சுயம்வரதபஸ்வினி சமேத பாா்வதீஸ்வரா் கோயிலில் அருள்பாலிக்கும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா், கைலாசநாதா் கோயில் சுப்பிரமணியா், அண்ணாமலையாா் கோயில் பாலசுப்பிரமணிய சுவாமி, திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரரா் கோயில் உள்ளிட்டவற்றில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.