Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையை சோ்ந்தவா் கைது
காரைக்கால்: காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சோ்ந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
காரைக்கால் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜகணபதி தலைமையிலான போலீஸாா் காரைக்கால் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்தவரை பிடித்து விசாரித்தனா். அவா், அஜய் (எ) அஜந்தன் (35), இலங்கை கிளிநொச்சியைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது.
காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என்பது தெரிய வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு 6 மாத கால விசாவில் இந்தியா வந்ததாகவும், விசா காலம் முடிந்து இலங்கை திரும்பாமல், மேற்கு வங்கம், ஆந்திரம், தில்லி, கேரளம், தமிழ்நாடு என நாட்டின் பல பகுதிகளில் சுற்றித் திரிந்ததாகவும் தெரிவித்துள்ளாா். போலீஸாா் அவரைக் கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.