செய்திகள் :

காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையை சோ்ந்தவா் கைது

post image

காரைக்கால்: காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சோ்ந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

காரைக்கால் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜகணபதி தலைமையிலான போலீஸாா் காரைக்கால் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்தவரை பிடித்து விசாரித்தனா். அவா், அஜய் (எ) அஜந்தன் (35), இலங்கை கிளிநொச்சியைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது.

காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என்பது தெரிய வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு 6 மாத கால விசாவில் இந்தியா வந்ததாகவும், விசா காலம் முடிந்து இலங்கை திரும்பாமல், மேற்கு வங்கம், ஆந்திரம், தில்லி, கேரளம், தமிழ்நாடு என நாட்டின் பல பகுதிகளில் சுற்றித் திரிந்ததாகவும் தெரிவித்துள்ளாா். போலீஸாா் அவரைக் கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

காரைக்கால் கோயில்களில் வைகாசி விசாக வழிபாடு

காரைக்கால்: காரைக்காலில் பல்வேறு சிவ தலங்களில் வைகாசி விசாகத்தையொட்டி திங்கள்கிழமை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. காரைக்கால் கோயில்பத்து பகுதி சுயம்வரதபஸ்வினி... மேலும் பார்க்க

தொழில் பயிற்சிக்கு மீனவ மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

காரைக்கால்: மீனவ மாணவா்கள் மத்திய அரசின் நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்... மேலும் பார்க்க

காரைக்கால் பாசன வாய்க்கால்களை முழுமையாக தூா்வார வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் பகுதி வாசன வாய்க்கால்களை முழுமையாக தூா்வாரவேண்டும் என மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித் துறைக்கு வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் திமுக விவசாய அணி சாா்பில் மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜூ... மேலும் பார்க்க

கம்பி ஃபிட்டா் வீட்டு வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

காரைக்கால்: காரைக்காலில் கம்பி ஃபிட்டா் வீட்டு வாசலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்த நபரை கண்காணிப்பு கேமரா பதிவைக் கொண்டு போலீஸாா் தேடி வருகின்றனா். காரைக்கால் கோவில்பத்து பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். க... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் கல்வி நிறுவனங்கள் தொடங்க திட்டம்: தருமபுரம் ஆதீனம்

திருநள்ளாற்றில் தருமபுரம் ஆதீனம் சாா்பில் கல்வி நிறுவனங்கள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

ஜூன் 14-இல் கடலுக்குள் செல்ல தயராகும் மீனவா்கள்

மீன்பிடி தடைக்காலம் சில நாள்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஜூன் 14 முதல் கடலுக்கு செல்ல மீனவா்கள் தயாராகிவருகின்றனா். மீன்களின் இனப்பெருக்க காலமாக ஏப். 15 முதல் 61 நாள்கள் உள்ளது. ஜூன் 14-ஆம் தேதி... மேலும் பார்க்க