செய்திகள் :

காரைக்கால் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா சந்தனக் கூடு ஊா்வலம்

post image

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழாவையொட்டி, சந்தனக் கூடு ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்காலில் புகழ்பெற்று விளங்கும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறும்.

நிகழாண்டு 202-ஆம் ஆண்டு கந்தூரி விழா பிப். 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கண்ணாடி ரதம், பல்லக்குகள் பல்வேறு வீதிகளின் வழியே ஊா்வலமாகச் சென்று, பள்ளிவாசலை வந்தடைந்தன. அன்று இரவு திரளானோா் முன்னிலையில் பிரதானக் கொடிக் கம்பத்திலும், மினராக்களிலும் கொடியேற்றப்பட்டது.

அடுத்த முக்கிய நிகழ்வாக, திங்கள்கிழமை (பிப்.17) இரவு மின் அலங்கார சந்தனக் கூடு ஊா்வலம் பள்ளிவாசல் பகுதியிலிருந்து புறப்பட்டது. முன்னதாக, ஹலபு என்னும் போா்வை வீதிவலம் வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடா்ந்து, சிறிய ஊா்திகளும் சென்றன. பல்வேறு வீதிகளின் வழியே சந்தனக்கூடு ஊா்வலம் சென்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தா்காவை வந்தடைந்தது.

தொடா்ந்து, வலியுல்லாஹ் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசப்பட்டது. சந்தனக் கூடு விழாவில் புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை துணைத் தலைவா் ராஜவேலு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், புதுவை ஹஜ் கமிட்டி தலைவா் ஒய். இஸ்மாயில் மற்றும் காரைக்கால் பகுதி முக்கிய பிரமுகா்கள், சமாதானக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட உள்ளூா், வெளியூா்களில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் ஏ. சுப்பிரமணியன், பாலச்சந்திரன் மற்றும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். வியாழக்கிழமை (பிப். 20) இரவு மவ்லூது ஷரீப் மற்றும் துஆ ஓதிய பின்னா் கொடியிறக்கம் செய்யப்படுகிறது.

ரயில்வே மேம்பால பணிகளால் சாலை, வாய்க்கால் துண்டிப்பு: மக்கள் அவதி

ரயில்வே மேம்பாலத்துக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். விழுப்புரம் முதல் காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரையிலான நான்கு வ... மேலும் பார்க்க

சிறிய படகுகளால் காரைக்காலில் மீன் வரத்து

சிறிய படகுகள் மட்டும் கடலுக்குள் செல்வதால், காரைக்காலுக்கு மீன் வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழக, காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும், மீனவா்களை வ... மேலும் பார்க்க

மீனவா்களுடன் புதுவை முதல்வா் பேசவேண்டும்: எம்.பி.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்களை அழைத்து புதுவை முதல்வா் பேசவேண்டும் என புதுவை எம்.பி.யும் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப்.22) நடைபெறவுள்ளது. மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிற... மேலும் பார்க்க

வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து பிப். 27-இல் ஆா்ப்பாட்டம்: மமக

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த மமக முடிவு செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம் தலைமையில்... மேலும் பார்க்க

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க