செய்திகள் :

காரைக்குடியில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடனுதவி முகாம்: வருகிற ஜூன் 30 வரை நடைபெறுகிறது

post image

தொழில் கடன், மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பெறுவதற்கு ஏதுவாக, குறு, சிறு, நடுத்தர நிறுவன தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வருகிற 30- ஆம் தேதி வரை காரைக்குடியிலுள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். இந்தக் கழகம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய தொழில் சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவிகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், காரைக்குடி கிளை, எண்- 45, எஸ்.பி.கே. வளாகம், இரண்டாம் தளம், ஸ்ரீ சண்முகராஜா சாலை, அம்பேத்கா் சிலை அருகில், காரைக்குடி- 630 001 என்ற முகவரியில் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில், குறு, சிறு, நடுத்தர நிறுவன தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

எனவே, புதிய தொழில் முனைவோா், தொழிலதிபா்கள் இந்த முகாம் மூலம் தொழில் கடன், மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு காரைக்குடி கிளை 04565-233464 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9445023464, 9442678010, 8122279058, 98422 59351 ஆகிய கைப்பேசி எண்களிலோ அல்லது கிளை மேலாளா், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், காரைக்குடி கிளை என்ற முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

திருப்பத்தூா் அருகே மாட்டுவண்டி பந்தயம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கருவேல்குறிச்சியில் சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. கஜேந்திர மோட்ச வைபத்தையொட்டி, சிவகங்கை - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப... மேலும் பார்க்க

சிவகங்கைக்கு ஜூன் 17-இல் துணை முதல்வா் வருகை!

சிவகங்கையில் வருகிற 17 -ஆம் தேதி நடைபெறும் அரசு, அரசு சாரா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கைக்கு வர இருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்... மேலும் பார்க்க

சிவகங்கையில் மக்கள் நீதிமன்றம்: 1914 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

சிவகங்கையில் மாவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,914 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ. 11.20 கோடி பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளும், வங... மேலும் பார்க்க

சாத்தனூா் - மதுரை பேருந்து சேவை தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாத்தனூா்-மதுரை இடையே வெள்ளிக்கிழமை புதிய அரசுப் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. சாத்தனூரிலிருந்து பஞ்சனூா், இளையான்குடி, சிவகங்கை வழியாக மதுரைக்கு இயக்கப்... மேலும் பார்க்க

விதிகளுக்குப் புறம்பாக பணியிட மாறுதல் அளிப்பதாக புகாா்!

மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பே விதிகளுக்குப் புறம்பாக பணியிட மாறுதல் அளிப்பதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தெரிவித்தது. இந்த அமைப்பின் சிவகங்கை மாவட்ட செ... மேலும் பார்க்க

மேலையூா் மல்லன் கருப்பா் கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், நடுவிக்கோட்டை அருகே மேலையூரில் அமைந்துள்ள மல்லன் கருப்பா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் சீரமைக்கப்பட்டு, புதிய கலசங்களுடன... மேலும் பார்க்க