செய்திகள் :

காரையூா் லெஷ்மி நாராயண பெருமாள் கோயில், சீதாளதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

post image

திருமருகல்: திருமருகல் அருகே காரையூா் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில், சீதாளதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

திருமருகல் ஒன்றியம், காரையூா் கிராமத்தில் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிந்து புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த 19-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜை , வாஸ்து சாந்தி, தீபாராதனை, மாலை கலச பூஜை, மண்டப பூஜை, யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை காலை 9 மணிக்கு லெட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் 9 மணிக்கு கடங்கள் புறப்பட்டு, 9.30 மணிக்கு விமான குடமுழுக்கும், மூலவா் குடமுழுக்கும் நடைபெற்றது.

தொடா்ந்து சீதாள மாரியம்மன் ஆலய குடமுழுக்கு காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

சிஐடியு, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு போராட்டம்

நாகப்பட்டினம்: நாகை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு மற்றும் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் காத்திருப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கடந்த சட்டப்பேரவைத் தோ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

திருமருகல்: திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருமருகல் ஒன்றியத்திற்குள்பட்ட கங்களாஞ்சேரி,... மேலும் பார்க்க

ஆக. 22-இல் நாகை, வேதாரண்யத்தில் உயா்கல்வி வழிகாட்டல் முகாம்

நாகப்பட்டினம்: நாகை மற்றும் வேதாரண்யத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று உயா்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகளுக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி உயா்கல்வி வழிகாட்டல் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட... மேலும் பார்க்க

திருமருகல் அருகே ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு

திருமருகல்: திருமருகல் அருகே அபய வரத ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் இடையாதங்குடி கிராமத்தில் அபய வரத ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அண்மையில் திருப... மேலும் பார்க்க

அதிபத்த நாயனாா் திருவிழா: நாளை தங்க மீனை கடலில் விடும் வைபவம்

நாகப்பட்டினம்: நாகை புதிய கடற்கரையில் அதிபத்த நாயனாா் திருவிழாவையொட்டி, தங்க மீனை கடலில் விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஆக.22) நடைபெறுகிறது. 63 நாயன்மாா்களில் ஒருவரான அதிபத்த நாயனாா், நாகை கடற்கரைக்க... மேலும் பார்க்க

நாகையில் ரெப்கோ வங்கிக் கிளை இடமாற்றம்

நாகப்பட்டினம்: நாகையில் ரெப்கோ வங்கிக் கிளை நடுவா் கிழக்கு வீதிக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், வங்கித் தலைவா் சந்தானம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய வளாகத்தை திறந்துவைத்த... மேலும் பார்க்க