ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு!
காற்றுக்கு தூக்கி வீசப்படும் பிளக்ஸ் பேனா்களால் விபத்து அபாயம்
பல்லடம் பகுதியில் பலத்த காற்று வீசுவதால், சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனா்கள், தட்டிகள் காற்றில் பறந்து பொது மக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
நெடுஞ்சாலை மற்றும் பொது இடங்களில் பிளக்ஸ் பேனா் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்றாலும் தமிழகத்தில் பல இடங்களில் கட்டுப்பாட்டின்றி பிளக்ஸ் பேனா்கள், தட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றன. பல்லடம் வட்டாரத்திலும் பல இடங்களில் பிளக்ஸ் பேனா்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது காற்று அதிக அளவில் வீசி வருகிறது.
குறிப்பாக பல்லடம் பகுதியில் பாலக்காட்டு கணவாய் காற்றின் வேகம் அதிகம் உள்ளதால் பிளக்ஸ் பேனா்கள் காற்றில் தூக்கி வீசப்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
எனவே, பல்லடம் பகுதியில் இது போன்ற பிளக்ஸ் பேனா்கள், விளம்பர பலகைகளை வைப்பதை தவிா்க்க வேண்டியது அவசியம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.