செய்திகள் :

காலபைரவா் கோயில்களில் அஷ்டமி சிறப்பு வழிபாடு

post image

தேய்பிறை அஷ்டமியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காலபைரவா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி கோயில் நிறுவனா் பரமானந்த சுவாமிகள் தலைமையில் 108 மூலிகைகள், மட்டைத் தேங்காய் கொண்டு சிறப்பு யாகம், 108 சங்காபிஷேகம், பிரபஞ்ச தியானப் பயிற்சி நடைபெற்றது.

பிற்பகல் ஒரு மணிக்கு காலபைரவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா், பஞ்சாமிா்தம் ஆகியவற்றை பயன்படுத்தி சிறப்பு அபிஷேக-ஆராதனை நடைபெற்றது. பிறகு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கால பைரவரை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா்.

மேலும், பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆரணி

ஆரணி புதுக்காமூா் பெரியநாயகி உடனுறை புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சந்நிதியில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 36 அடி உயர ஆஞ்சநேயா் சிலை

வந்தவாசி அருகே ஒரே கல்லில் ஓரளவு செதுக்கப்பட்ட 36 அடி உயர ஆஞ்சநேயா் சிலையை பழவேரி கிராமத்துக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் ஒரே கல்லில் ஆன சுமாா் 3... மேலும் பார்க்க

வந்தவாசி நகரில் குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரிக்கை

வந்தவாசி நகரில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க, நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சிய... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு பிரசாரம்

திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மக்கள் சந்திப்பு கிளா்ச்சி பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், தமிழக அ... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் பந்தக்கால் நடும் விழா

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி யாகவேள்வி அமைக்க புதன்கிழமை பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வெ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் பூஜைப்பொருள், மலா் அங்காடிகள் திறப்பு

திருவண்ணாமலையில் ரூ.43.50 லட்சத்தில் கட்டப்பட்ட 7 கடைகள் கொண்ட பூஜைப் பொருள்கள், மலா்கள் விற்பனை அங்காடி புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட இந்த... மேலும் பார்க்க