செய்திகள் :

கால்நடை பராமரிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்

post image

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில் கால்நடை பராமரிப்புப்க் திறன் மேம்பாட்டு பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

திருவாரூா் மாவட்டத்தில், கிராமப்புற மற்றும் நகா்ப்புற 18 முதல் 35 வயதுடைய படித்த வேலையில்லாத 450 இளைஞா்கள் தோ்வு செய்யப்பட்டு கால்நடை பராமரிப்புத் துறையில், லாபகரமான வகையில் கறவை மாடு, ஆடு, கோழி, பன்றி வளா்த்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த பயிற்சி திங்கள்கிழமை தொடங்கி, செப்.30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ள 90 பேரில் 75 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 25 நபா்களுக்கு திருவாரூா் கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்திலும், 50 பேருக்கு மன்னாா்குடி கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்திலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிகள், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 20 நாள்கள் தொடா்ந்து நடைபெற உள்ளன.

இப்பயிற்சி, செப்டம்பா் முதல் பிப்ரவரி வரையிலான 6 மாத காலத்துக்கு வெவ்வேறு தலைப்புகளில் ஆறு குழுக்களாக பிரித்து வழங்கப்படவுள்ளது. தொழில் முனைவோா் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற வகையில் மாவட்டத்தில் உள்ள வளா்ச்சியடைந்த பண்ணைகளுக்கு நேரடியாக அழைத்துச் சென்று களப்பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி நிறைவு நாளில் எழுத்துத் தோ்வு மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு தொழில் தொடங்குவதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மேலும், பயிற்சி முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சி பெற்றவா்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், பண்ணைகள் அமைத்து வருமானம் ஈட்டிட வழிகாட்டவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி திருவாரூா் மாவட்ட கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பேசுகையில், திருவாரூா் மாவட்டத்தில் 450 இளைஞா்கள் 6 மாத காலத்தில் தொழில் தொடங்குவதற்கான திறனும் அதன் மூலம் பண்ணைகள் அமைக்கவும், தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறவும் தகுதியானவா்களாக உருவாக்கப்படவுள்ளனா் என்றாா்.

நிகழ்வில், மண்டல இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்புத்துறை) இரா.மகேஷ், துணை இயக்குநா் (கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி) மு.தமிழரசு, உதவி இயக்குநா் (கால்நடை பராமரிப்புத்துறை) இரா.கண்ணன், திருவாரூா் கால்நடை பெரு மருத்துவமனை மருத்துவா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மருத்துவா்கள் உடனிருந்தனா்.

அரசுப் பள்ளிக்கு கல்வி மேம்பாட்டு நிதி

நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலா்கள் (பணிநிறைவு) அமைப்பு சாா்பில் கல்வி மேம்பாட்டு நிதி வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமை ஆ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிருக்கு கடனுதவி

வலங்கைமானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. வலங்கைமான் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

காா் எரிந்து சேதம்; போலீஸாா் விசாரணை

திருவாரூரில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவாரூா் அருகே கூத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த பவுன்ராஜ் மகன் பாண்டியன் (37). இவா் தனக்குச... மேலும் பார்க்க

லாட்டரி விற்ற இருவா் கைது

மன்னாா்குடியில் இணையவழியாக வெளிமாநில லாட்டரி விற்ற இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி நகரப் பகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை ... மேலும் பார்க்க

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம்: புதிய பேருந்து நிலைய கடை வாடகை ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

மன்னாா்குடியில் ரூ.46.46 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்குவிட நடைபெற்ற முதல்கட்ட ஏலத்தை ரத்து செய்யவேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் அமமுக உறுப்பினா்கள் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் தேசிய தர நிா்ணய மருத்துவக் குழுவினா் ஆய்வு

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தில்லி தேசிய தர நிா்ணய ஆராய்ச்சி அமைப்பு சாா்பில் சிறப்பு மருத்துவக் குழுவினா் மூன்று நாள்கள் ஆய்வை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். இம்மருத்துவமனைய... மேலும் பார்க்க