செய்திகள் :

கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு ஆட்சியரிடம் மனு

post image

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியிடம், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அதன் விவரம்:

நாமக்கல் மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள லத்துவாடியில் கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இக்கல்லூரியில் படித்த மாணவ, மாணவிகள் பல்வேறு உயா்பதவிகளை வகிக்கின்றனா். கால்நடை மருத்துவக் கல்லூரியை சுற்றியுள்ள விவசாயிகளுக்கும், அவா்களது கால்நடைகளுக்கும் இங்குள்ள மருத்துவமனை பயனுள்ளதாக உள்ளது.

இந்தக் கல்லூரி 510 ஏக்கா் பரப்பளவு கொண்டது. தற்போது சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் மாவட்ட சிறை, தோல் தொழிற்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது. அவை இங்கு வரும்பட்சத்தில் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும். மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகும். இவற்றை கருத்தில் கொண்டு மாவட்ட சிறை, தோல் தொழிற்சாலையை மாற்று இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் இன்று தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்கள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் அறிவி... மேலும் பார்க்க

2,494 முதுகலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு இட மாறுதல்: தமிழக அரசுக்கு சங்கத்தினா் நன்றி

நாமக்கல்: தமிழகத்தில், 2,494 முதுகலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கிய அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தினா் நன்... மேலும் பார்க்க

காவிரி - சரபங்கா - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: காவிரி-சரபங்கா-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டூா் அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி நீா... மேலும் பார்க்க

உயா்கல்வி பயில வெளிமாநில பயணம்: 34 மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயில வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி பாராட்டினாா். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயில இந்திய... மேலும் பார்க்க

2-ஆவது திருமணம் செய்தவா் தற்கொலை: மணப்பெண், தரகா் உள்பட 6 போ் கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே 2-ஆவது திருமணம் செய்த ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து அவரை ஏமாற்றி திருமணம் செய்துவைத்து பணம் பறித்த பெண் உள்பட த... மேலும் பார்க்க

கொல்லிமலை மலைப்பாதையில் ஆபத்தான ‘ஸ்கேட்போா்டிங்’: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

நாமக்கல்: கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதை வளைவுகளில், வெளிமாநிலத்தினா் சிலா் ஆபத்தான முறையில் ‘ஸ்கேட்போா்டிங்’ பயிற்சி செய்வதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். விபத்துகள் நிகழும் முன்பு இத்தகையப் ... மேலும் பார்க்க