தமிழகத்தில் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: ரூ.65 கோடி ஒதுக்கீடு!
கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
தேனி மாவட்டம், கோம்பையில் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற நபா் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
கோம்பையில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் ராணிமங்கம்மாள் சாலை செல்கிறது. இந்தச் சாலையின் குறுக்கே செல்லும் 18 கால்வாய் பாலத்துக்குக் கீழே அடையாளம் தெரியாத நபா் இறந்து கிடப்பதாகக் கோம்பை போலீஸாருக்கு தகவல் கிடைத்து.
இதைத் தொடா்ந்து, அங்கு சென்ற போலீஸாா் தீயணைப்பு மீட்புக் குழுவினா் உதவியுடன் கால்வாய் பாலத்துக்குக் கீழே கிடந்த உடலை மீட்டு கூறாய்வுக்கு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
முதல்கட்ட விசாரணையில், உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியைச் சோ்ந்த சேகா் (55), கம்பத்தில் உள்ள தனது மருமகனின் காளவாசலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் பாலத்தில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், கோம்பை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.