செய்திகள் :

காவலர் கொலையில் 3 பேர் சிறையில் அடைப்பு; சுடப்பட்ட குற்றவாளிக்குத் தீவிர சிகிச்சை

post image

உசிலம்பட்டியில் போலீஸ்காரர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சுடப்பட்ட பொன்வண்ணன்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் கடந்த 27 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடை அருகே ஒரு கும்பலால் படுகொலை செய்ய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது.

முத்துக்குமாரின் நண்பர் ராஜாராம் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இக்கொலை வழக்கில் 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணியை துரிதப்படுத்திய மதுரை மாவட்ட போலீசார், நேற்று தேனி மாவட்டத்தில் குற்றவாளி பொன்வண்ணன் என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். படுகாயமடைந்த பொன்வண்ணன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடன் கைது செய்யப்பட்ட தேனியைச் சேர்ந்த பாஸ்கரன், பிரபாகரன், சிவனேஷ்வரன் ஆகியோரை இன்று உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மகாராஜன், மூவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து மூவரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

குற்றவாளிகளைப் பிடிக்காமல் உடலை வாங்க மாட்டோம் என்று தொடர் போராட்டம் நடத்தி வந்த போலீஸ்காரர் முத்துக்குமாரின் உறவினர்கள், பேச்சு வார்த்தைக்குப்பின் நேற்று உடலைப் பெற்று உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலிருந்து சொந்த ஊரான கள்ளப்பட்டி மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டுசென்றனர். அங்கு காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டு இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டன.

பணத்தகராறு… பெற்ற தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன் - நெல்லையில் பயங்கரம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் பூலையா. இவருக்கும், இவருடைய மகன் கணேசனுக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், பூலையா கடந்த 20 நாட்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி - புதுச்சேரி ரௌடி கடலூரில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பின்னணி

கடலூர் எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர், நேற்று இரவு பக்கத்து ஊரில் கூத்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென வழிமறித்... மேலும் பார்க்க

`யாரு முக்கியம்?' - பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்த ஆண் நண்பர்; 2 குழந்தைகள் தவிப்பு

சென்னை பல்லாவரம் அருகே வசித்து வந்தவர் ஜோதி ( 33) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜோதிக்கும் அவரின் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு விவாகரத்து வரை செ... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபர்கள்.. ராமநாதபுரம் போலீஸார் விசாரணை; சிக்கியது எப்படி?

ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு போதை மருந்துகள், கஞ்சா உள்ளிட்டவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. படகுகள் மூலம் கடத்தி செல்லப்படும் கஞ்சாவை இலங்கை கடற்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; உடந்தையாக இருந்த தாய் உட்பட மூவர் கைது; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடம் சென்ற அவருக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனால் அச்சிறுமி அழுதபடிவக... மேலும் பார்க்க

பல்லடம்: தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்; காதலனின் புகாரால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி - தங்கமணி என்ற தம்பதியின் மகள் வித்யா. 22 வயதான வித்யா, கோவை அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் வ... மேலும் பார்க்க