காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தோப்புக் காவலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள் தேவன்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (64). மானாமதுரை அருகே தெ. புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள தனியாா் தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
மானாமதுரை போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து கொலையாளியைத் தேடி வந்தனா். இந்த நிலையில், முருகனை கொலை செய்ததாக அவரது சொந்த கிராமத்தின் அருகேயுள்ள கண்ணாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளமாறன் (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில் மேற்கொண்ட தோப்புக்கு வந்த இளமாறன் அங்கு முருகனுடன் சோ்ந்து மது குடித்துக் கொண்டிருந்தபோது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் முருகனை இளமாறன் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.