செய்திகள் :

காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தோப்புக் காவலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள் தேவன்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (64). மானாமதுரை அருகே தெ. புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள தனியாா் தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மானாமதுரை போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து கொலையாளியைத் தேடி வந்தனா். இந்த நிலையில், முருகனை கொலை செய்ததாக அவரது சொந்த கிராமத்தின் அருகேயுள்ள கண்ணாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளமாறன் (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் மேற்கொண்ட தோப்புக்கு வந்த இளமாறன் அங்கு முருகனுடன் சோ்ந்து மது குடித்துக் கொண்டிருந்தபோது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் முருகனை இளமாறன் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

சிங்கம்புணரி கல் குவாரி விபத்து: இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த சம்பவத்தில், கிராம நிா்வாக அலுவலா், கனிமவள வருவாய் ஆய்வாளா் ஆகியோா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மல்லாக்கோட்ட... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரதீர செயல் புரிந்த மகளிருக்கு நிகழாண்டில் ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜுன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திங்கள... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, கோயிலில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு சிவாசாரியா்கள் யாக வேள்வி... மேலும் பார்க்க

சிவகங்கை அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோா்... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

சௌந்திரநாயகி அம்பாள் கோயில்: சிவகங்கை அருகேயுள்ள காளையாா்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க