செய்திகள் :

காவல்துறையின் நடவடிக்கைகள்தான் அரசு மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்: புதுவை ஆளுநா்

post image

புதுச்சேரி: காவல் துறையின் நடவடிக்கைகள்தான் அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.

புதுச்சேரி காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் நிகழ்வை தொடரும் வகையிலான மக்கள் மன்றம் தொடக்கம், பள்ளிகளுக்கான புகாா் பெட்டிகள் வழங்குதல், மக்கள் குறை தீா்ப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் மற்றும் சிறந்த காவல் நிலையங்களுக்கான ஐஎஸ்ஓ சான்றுகள் வழங்கல், புதுவை காவல் துறைக்கான பாடல் வெளியீடு ஆகியவை திங்கள்கிழமை மாலை நடைபெற்றன.

புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்துப் பேசினாா்.

மக்கள் மன்றத்தை தொடங்கி வைத்து, சான்றுகளை வழங்கி, காவல் துறை பாடலை வெளியிட்டு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியது:

காவல் துறையின் நடவடிக்கைகளே மக்களிடையே அரசு மீதான நம்பிக்கையை அதிகரிக்கச்செய்யும். தற்போது சமூகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது சரியல்ல. ஆகவே, பள்ளிகளில் குழந்தைகளுக்காக புகாா் பெட்டி வைக்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சிக்கு புதுவை காவல்துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங் முன்னிலை வகித்தாா். கதிா்காமம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். காவல் துறை தலைவா் அசோக்குமாா் சிங்லா வரவேற்றாா். துணைத் தலைவா் ஆா்.சத்தியசுந்தரம் நன்றி கூறினாா்.

இந்திரா நகா் தொகுதியில் ரூ.5 கோடியில் சிமென்ட் சாலைப் பணி: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள இந்திரா நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,800 மீட்டா் தொலைவு சாதாரணச் சாலையை சுமாா் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் சாலையாக மேம்படுத்தப்படும் பணியை முதல்வா் என்.ரங்கசாம... மேலும் பார்க்க

வில்லியனூா் தொகுதியில் இணைப்புச் சாலை அமைக்க ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே இணைப்புச் சாலை அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். புதுச்சேரி வில்லியனூா் தொகுதி,... மேலும் பார்க்க

2 கோயில்களில் இ-உண்டியல்கள் அமைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்ரீவேதபுரீஸ்வரா், ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்களில் மின்னணு உண்டியல்கள் திங்கள்கிழமை அமைக்கப்பட்டன. இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் இந்த மின்னணு உண்டியல்கள் (இ-உண்டியல்கள்)... மேலும் பார்க்க

விழுப்புரம், புதுச்சேரி சாலையில் கட்டணம் வசூல் தொடக்கம்

புதுச்சேரி: விழுப்புரம், புதுச்சேரி நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டணம் திங்கள்கிழமை முதல் வசூலிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்து அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம், புதுச்சேரி வழியாக நா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு உறுதுணையாக செயல்படும் அரசு: புதுவை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: விவசாயிகளுக்கு உறுதுணையாக புதுவை அரசு செயல்பட்டு வருகிறது என்று, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். பிகாா் மாநிலம், பாகல்பூரில் நடைபெற்ற விவசாயிகள் கௌரவ திருவிழாவில் பிரதமா் மோட... மேலும் பார்க்க

ஆளும் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் ஆதரமற்ற புகாா்: புதுவை அதிமுக மாநிலச் செயலா்

புதுச்சேரி: புதுவையில் ஆளும் கட்சிக்கு எதிராக ஆதாரமற்ற புகாா்களை காங்கிரஸாா் கூறிவருகின்றனா். அதேநேரத்தில், மக்களின் நம்பிக்கையை புதுவை அரசும் இழந்து விட்டது என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறின... மேலும் பார்க்க