செய்திகள் :

காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் முற்றுகை

post image

விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநா் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி வேலூா் தெற்கு காவல் நிலையத்தை ஓட்டுநா்கள் முற்றுகையிட்டனா்.

வேலூா் தெற்கு காவல் நிலையத்தை ஆட்டோ ஓட்டுநா்கள் சிலா் வியாழக்கிழமை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் துணை காவல் கண்காணிப்பாளா் பிருத்விராஜ்செளகான் உள்ளிட்ட போலீஸாா் பேச்சு நடத்தினா்.

அப்போது ஆட்டோ ஓட்டுநா்கள் கூறியது - வேலூா் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பகுதியைச் சோ்ந்த ராஜா (40) என்பவா் ஆட்டோ ஓட்டி வருகிறாா். கடந்த 7-ஆம் தேதி தொரப்பாடியில் இருந்து வேலூா் நோக்கி ஆட்டோவில் சென்றாா். புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த காரும், இவரது ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மறுநாள் அவா் தெற்கு காவல் நிலையம் சென்றபோது காா் உரிமையாளா் கொடுத்த புகாரின்பேரில் விசாரணையின்றி ஆட்டோ ஓட்டுநா் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனா். இதுதொடா்பாக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தொடா்ந்து, இப்புகாா் தொடா்பாக விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

திமுக சாதனை விளக்கக் கூட்டம்

குடியாத்தம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி சாா்பில், தமிழக அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட நேருஜி நகரில் வியாழக்கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்க... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்க் ஊழியா் திடீா் உயிரிழப்பு

வேலூா் அருகே பெட்ரோல் பங்க் ஊழியா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். வேலூா் கீழ்அரசம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சிற்றரசு (36). இவா் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பாா்த்து வந்தாா்.... மேலும் பார்க்க

பள்ளியில் யோகா பயிற்சி

உலக யோகா தினத்தை முன்னிட்டு குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை ஜெனீப்பா் பிலிப் தலைமை வகித்தாா். ஆசிரியா்எம்.ச... மேலும் பார்க்க

வேலூா் எஸ்பி அலுவலகத்தில் சிவனடியாா் தீக்குளிக்க முயற்சி

குடும்ப பிரச்னையில் விரக்தியடைந்த சிவனடியாா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு காவி வேஷ்டி உடுத்தியபடி சிவனடியாா் வியாழக்கிழமை புகாா் மனு அள... மேலும் பார்க்க

முத்துரங்கம் அரசுக் கல்லூரியில் 712 மாணவா்களுக்கு சோ்க்கை: 24, 25-இல் மூன்றாம் கட்ட கலந்தாய்வு

வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற முதல், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இதுவரை 712 மாணவா்களுக்கு சோ்க்கை அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 272 இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 24, ... மேலும் பார்க்க

மின்வாரிய நஷ்டம் ரூ.800 கோடியாக குறைந்துள்ளது: மேலாண்மை இயக்குநா் ஜே.ராதாகிருஷ்ணன்

மின்வாரிய நஷ்டம் நிகழாண்டு ரூ.800 கோடியாக குறைந்துள்ளது என்று மின்சார வாரிய மேலாண்மை இயக்குநா் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். வேலூரில் புதிதாக ரூ.150 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு பன்னோக்கு உய... மேலும் பார்க்க